இயற்கை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் இயற்கையே நம் தலையில்...
இயற்கை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்
இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது. இதனால் தலைமுடி பிரஷ்ஷா இருப்பதா இருந்தாலும் இது முடிக்கு மிகுந்த கெடுதல்.
1) தண்ணிர்: நிஜமா தலை முடிக்கு தோதான ஷாம்பு இதான். தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாவும் ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.
2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்தணும். தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது
3) எலுமிச்சை : எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது எலுமீசை ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனரா பயன்படுத்துங்கள் போதும்.