எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவில் வந்த காதலி!!!!! இந்த குட்டி பையனோட குட்டி...

கனவில் வந்த காதலி!!!!!

இந்த  குட்டி  பையனோட குட்டி  காதல் கதை..........

    என்  கல்லூரி  காதல்  கதை.........
        அன்னை வேளாங்கண்ணி கல்லூரி opn .....
  முதல் நாள் நான் கல்லூரிக்கு  சென்றான்.. அங்கு admition நடந்து கொண்டு இருக்க நானும் admtn form   வாங்கி  fill- செய்து  கொண்டு இருத்தேன்.. அப்போது தான் அவளை பார்த்தேன்.. பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.. நான் என் பாட பிரிவை தேர்வு செய்து விட்டு வந்தேன்.. என்னை வகுப்புக்குள் அழைத்தார்கள்.. நானும் சென்றேன்.  நான் நினைத்து கூட பார்க்க வில்லை அவளும் என் பாடபிரிவு எடுத்து என் cls-க்கு தான் வருவாள் என்று . ஏதோ ஒன்றை விட்டு வந்தது போல் அவள் கண்கள் படபடத்து  கொண்டு இருக்க நானும் அவளை ரசித்து கொண்டு இருக்க திடிரென்று ஆசிரியர் class-குள் வந்தார் .முதல் நாள் என்றதால்  ,  எங்கள் பெயர்களை கேட்டார். நானும் எழுந்து எனது பெயர்  குட்டி  என்று அனைத்தையும் சொல்ல, பின் நண்பர்கள் அனைவரும் அவர்கள் பெயர்களை சொல்ல நான் எதையும் கேட்க்க  வில்லை   அவளை பார்த்து கொண்டே இருத்தேன். அவளும் எழுந்து அவள் பெயர் ரம்யா என்றாள் .. சிறுது நேரம் அவள் பெயரை உச்சரித்து கொண்டே இருந்தேன்... அன்று நாள் முழுதும் அவள் நினைவுதான்....          அவளிடம் பேச வில்லை என்றாலும் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு  திரும்புவேன்....

இப்படியே  மாதங்கள் வேகமாக  ஓடி  கொண்டே இருந்தது... என் காதல்  வெறும் பார்வையில்   தான் ஓடியது... அவளிடம் இதுவரை பேசவே இல்லை...
 நான் அவளை பார்ப்பது நண்பர்கள் எல்லார்க்கும் தெரிய அவளுக்கும் புரிந்திருக்கும் நான் அவளை நேசிக்கிறேன் என்று.. நானாக சொல்லவே இல்லை  அவளை விரும்பிக்கிறேன் என்று...

 மாதங்கள் ஓடுவதை நிறுத்தவும் இல்லை  காதலை  சொல்ல நான் வாய்ப்பு தேடவும்  இல்லை.. 

  அன்று டிசம்பர்   மாதம் கல்லூரில் கிறிஸ்துமஸ் டே fnctn .. அன்று தான் என் காதல் சொல்ல வாய்ப்பும் கிடைத்தது... நானும் வகுப்புக்குள் செல்ல அவளோ தனிமையில் இருக்கிறாள்  என்னை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள் ..   காதலை சொல்ல வார்த்தையும் வரவில்லை  இதை விட்டா வேற வாய்ப்பும் இல்லை , என்னை நானே தைரிய படுத்தி கொண்டேன்  அவள் பக்கத்தில்  சென்று  அவளை அழைத்தேன் சிறுது நிமிர்ந்து  பார்த்து சொல்   என்றாள் ..  நானும்  சொல்ல துவங்கினேன்.. உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு  என்னை உனக்கு புடிசிருக்கா என்று......

 சிறுது புன்னகையுடன்  அவள் ஏதோ சொல்ல வந்தாள்..

  தீடீர் என்று அம்மா கதவை தட்டும் சத்தம்  டேய் காலை விடிந்துவிட்டது எழுந்து வா டா  என்று...  கனவும் கலைந்து விட்டது  நானும் எழுந்து விட்டேன்.....

 ... நினைக்க நினைக்க  அவள் என்ன சொல்ல வந்திருப்பாள் என்ற கேள்வி தான் எனக்குள்.................

பதிவு : kutti
நாள் : 9-Feb-19, 9:39 pm

மேலே