எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்டேன்...! காண்பீர்...! சுயநல பூமி ஒன்று கண்டேன்... இது...

கண்டேன்...! காண்பீர்...!

சுயநல பூமி ஒன்று  கண்டேன்...
இது உருண்டை அல்ல உள்ளே பல மேடு பள்ளம் காண்பீர்...

நீருக்கு சண்டை பல  கண்டேன்....
அதை சேமிக்க ஒருவர்க்கும் மனமில்லை
காண்பீர்...

உணவில்லா மாந்தர்கள் ஊரிலே கண்டேன்...
அவர் நிலை போக்கும் தலைவன் எங்கும் இல்லை காண்பீர்....

தீண்டாமை ஒழிப்பினை
ஏட்டிலே கண்டேன்...
சாதிக்கொரு சங்கம் இந்நாடெங்கும் காண்பீர்...

புதுமைப்பெண் பாரதியின் கனவிலே கண்டேன்....
மதிப்பெண் பெற்றும் மாய்த்துக்கொள்ளும் சூழல் இங்கே காண்பீர்....

இயற்கையின் நெறியிலே வாழ்ந்து வந்தோம் நாமே...
இன்று மருந்துகளின் அடிமையாய் வாழ்கிறோம் ஏனோ....?

லாபத்தை பெற வேண்டி சூழ்ச்சி வலை சுற்றும்...
அதில் சிக்காமல் பிழைப்பதற்கு வழிகள் இல்லை ஏனோ...??

அடிமையாய் வாழ்கிறோம் சுதந்திர நாட்டிலே...
சர்வாதிகாரம் நடக்கிறது
இந்த ஜனநாயக நாட்டிலே...

பணமொன்றே பெரும்பொருளாய் திகழும் இவ்வுலகிலே...
அன்பிற்கும் விலையுண்டோ சொல்லுவாய் மனிதனே....

கடல் பொங்கி நிலம் நடுங்கி அழியப்போகும் புவியிலே....
இயன்ற வரை இயற்கையினை காத்து நிற்போம் நண்பனே...!!!




பதிவு : Barathraj
நாள் : 24-Feb-19, 12:50 pm

மேலே