எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

34 . கன்னித்தாலாட்டு. . . கன்னித்தாய் பாடுகிறேன்...

34. கன்னித்தாலாட்டு. . . 

கன்னித்தாய் பாடுகிறேன் தாலாட்டு
கண்மணியே கண்ணுறங்கு அதை கேட்டு 
கவலை வேண்டாம் உனக்கிங்கே 
உனக்காக இருக்கிறேன் நானிங்கே 
மூழ்காமல் முத்தெடுத்தேனே - உன்னை
முழுமனதாய் தத்தெடுத்தேனே
செல்லமே. . . தங்கமே. . கண்ணுறங்கு 
என்னுள்ளமே  உனக்குத்தான் நீயுறங்கு . . .  (கன்னித்தாய்)

மாங்காய் நானும் தின்னவில்லை
மசக்கையில் நானும் இருந்ததில்லை 
சாம்பலெல்லாம் ருசித்ததில்லை 
பத்தியமேதும் இருந்ததில்லை 
பைத்தியமாகி போறேனே நொடியும் 
உன்னை காணாவிடில் . ..  (கன்னித்தாய் )
வயிற்றில் உன்னை சுமக்கவில்லை
வந்தாயே வசந்தமாய் என்வாழ்வில் 
இலையுதிர் காலம் இனியுமில்லை 
நீதானே இசையானாய் என்நாவில்
தாயாகி மகிழ்கின்றேன் - உனக்கு 
தாலாட்டு பாடுகின்றேன் . .  (கன்னித்தாய் ) 
வசனம்: நீ அம்மான்னு சொல்லயில - நான் 
ஆனந்தத்தில் மூழ்குகின்றேன் - உன்
பிஞ்சு விரல் தொடுகையில் 
நெஞ்சு குளிர்ந்து மயங்குகின்றேன் 
உன்விழியுருட்டி பார்க்கையிலே -  நான் 
விண்மீனாய் மின்னுகின்றேன் - என்
 சொந்தமாக வந்தாயே - வாழ்வில் 
சந்தங்களை தந்தாயே
பிள்ளைபெற தகுதியிருந்தும் 
தத்தெடுத்தேனே உன்னைத்தானே - உன்ன  
பெத்தெடுத்தவ தெருவுல போட்டதால 
(பாட்டு)
கன்னித்தாய் ஆனேனே செல்லமே உனக்காக 
ஊர்பேச்சு எனக்கெதுக்கு உன்பேச்ச கேட்டபின்னே 
தத்தெடுப்பதில் குத்தமில்ல தெரிஞ்சுக்கோங்க 
குப்பைவாழ் குழந்தைகளுக்கு வாழ்வுதாங்க .

மு. ஏழுமலை   




 

   

பதிவு : மு ஏழுமலை
நாள் : 22-Mar-19, 3:38 pm

மேலே