முனிவருக்கும் பாடம் புகட்டும் முனைவர் பிறந்த தினம் இன்று......
முனிவருக்கும் பாடம் புகட்டும்
முனைவர் பிறந்த தினம் இன்று...
இந்தியா சுதந்திரம் பெற்றாலும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை என்று தீர்ப்பு எழுதினீர் அன்று....
இந்தியாவின் சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என்ற மமதையில்
தாண்டவமாடியது பாசிச தந்திரம்...!
தகர்த்து எறிந்தது பாபா(சாகேப்)வின் சட்டம் எனும் மந்திரம்....!
சிதைந்து கிடந்த
எம் சமூகத்தை
சீர்திருத்த வந்ததொரு சிகரம்...!
இந்திய மண்ணில் எவராலும் தொடமுடியாத சரித்திரத்தின் உயரம்....!
பாபா(சாகேப்)
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்....
சமநீதி சாசனத்தின் சரித்திரம் எழுத காகிதத்தில் இடமில்லை....!
பேனாவிலும் மை இல்லை....!
உம் சட்டத்தில் பிழையில்லை...!
உம் பிழையைத் திருத்த
வருபவர்களும் இங்கு குறையில்லை...!
நீங்கள் அழிக்க துடித்த
தீண்டாமைக்கு இங்கு பஞ்சமில்லை...!
நீங்கள் ஒட்ட நினைத்த ஒற்றுமைக்கும் இங்கு இடமில்லை...!
இதுவே எம் பாரதநாட்டின்
புதுமை மிக்க சமநீதி எல்லை.....!
Create by ✍️ thamim ✍️