எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மக்களுக்கு நாளடைவில் கொரானா பற்றிய அச்சம் குறைய ஆரம்பித்து...

மக்களுக்கு நாளடைவில் கொரானா பற்றிய அச்சம் குறைய ஆரம்பித்து ,பிறகு அதனோடு பழக ஆரம்பித்து , தற்போது அதை மறக்கத் தொடங்கிவிட்டனர் . அதன் பரவலும் குறைய ஆரம்பித்து விட்டது என்று மக்கள்நம்புவதும் மற்றும் அரசாங்கம் நாளும் வெளியிடுகின்ற பாதித்தவர்எண்ணிக்கை அறிவிப்பும் முக்கிய காரணம் . மேலும் பலரும் ஓரளவுபாதுகாப்பு முன்னெச்சரிக்கையை அனுசரிப்பதும்.


அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பது எனது விருப்பம் .

தற்போது நமது மாநிலத்தில் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது . இது வழக்கமாக ஐந்தாண்டுகளுக்கு வருகின்ற ஒன்று தான் என்றாலும் , இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது . காரணம் பெரிய ஆளுமைகள் மறைந்து விட்டனர் . ஆகவே மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு வெளிப்படையாக தெரிகிறது . மேலும் புதிய தலைமுறையினர் அதிகமாக வாக்களித்து தேர்வு செய்கின்ற நிலை உருவாகி இருக்கிறது . தற்போது உள்ள நிலை மாறி , தமிழகம் முன்னேற்றம் அடைய ஒரு மாற்றம் தேவை என்பது அனைவரின் மனதிலும் தோன்றியிருப்பதைக் காண முடிகிறது .வாக்களிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை , யாருக்கு என்பது அவரவர் விருப்பம் . ஆயினும் அனைத்துத் தரப்பு வாக்காளரும் சிந்தித்து செயல்படுதல் மிக அவசியம் .

அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் , எவருக்கும் எந்தவித குறையின்றி ஆட்சி நடத்தும் தகுதி வாய்ந்த , அனுபவம் வாய்ந்த தலைவர் தலைமையில் ஒரு நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் . ஒன்றிணைந்து செயலாற்றுவோம் . 

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்நாடு !

பழனி குமார்2Manivannan Manavalan and Sasi Kumar

நாள் : 22-Jan-21, 11:16 pm

மேலே