எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்மை வாழ வைப்பது எது ? நம்முடன் இறுதியில்...

நம்மை வாழ வைப்பது எது ? நம்முடன் இறுதியில் வருவது எது ? 


நமது பதவியா? 
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா? 
 நமது அறிவா? 
 நமது பிள்ளைகளா? 

எது நம்மைக் காப்பாற்றப் போகிறது? ஏதுமில்லை என்பதை உணருங்கள் !


ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.


பிறரை வாழ வைத்து வாழ்வோம். அதுவே மனிதம் நிறைந்த மனம் கொண்டவரின் நிறைவான வாழ்க்கை ! 


பழனி குமார்  

நாள் : 27-Feb-21, 7:32 am

மேலே