எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று...

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்;

வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்;

மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்;

சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்;

மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்;

கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்;

பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; 

உறவே!!!

உன்னை பிரிந்து செல்ல மனமில்லாமல் நான்!

நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! 

பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 

பதிவு : Rakki1418
நாள் : 24-Mar-21, 10:29 am

மேலே