மூன்று கடினமான கேள்விகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு வாலிபன், அவன்...
மூன்று கடினமான கேள்விகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு வாலிபன், அவன் தன்
படிப்பை வெளி பிரதேசம்
சென்று படித்தான். பல வருடங்கள்
பின்
தன் சொந்த ஊர் திரும்பினான்.
வீடு வந்த வாலிபன் தன்
தந்தையிடம்
ஒரு மார்க்க அறிஞர்
அல்லது முஸ்லிம்
பெரியவரை பார்க்கனும் என்றார்
.
அவ்வாறே அவனின்
தந்தை வாலிபனை ஒரு முஸ்லிம்
அறிஞரிடம்
அழைத்து சென்றார்.
முஸ்லிம் அறிஞரிடம் சென்ற
வாலிபன்,
“நீங்கள் யார்?, என்
கேள்விகளுக்கு பதிலளிக்க
முடியுமா?” என
கேட்டான்.
“நான் அல்லாஹ்வின் அடிமை,
இன்ஷா அல்லாஹ், நான் உன்
கேள்விகளுக்கு பதிலளிக்கின்றேன்”
என்றார்
அறிஞர்.
“உண்மையாகவா?,
இதுவரை யாராலும்
பதிலளிக்க முடியாத
கேள்வியே என் கேள்விகள்”
என்றான் வாலிபன்.
“அல்லாஹ்வின் உதவியால் நான்
முயற்சி செய்கிறேன்” என்றார்
அறிஞர்.
“என்னிடம் மூன்று கேள்விகள்
உள்ளன”
என்று கூறி ஆரம்பித்தான்.
முதல் கேள்வி: அல்லாஹ்
இருக்கிறான்,
அப்படி என்றால் அவனை காட்ட
முடியுமா?
இரண்டாம்கேள்வி: தக்தீர் (விதி)
என்பது என்ன?
மூன்றாம் கேள்வி: சைத்தான்
நெருப்பால் படைக்கப்பட்டவன்,
அவ்வாறு இருக்கும்
போது அவனை ஏன்
அல்லாஹ் நரக நெருப்பில்
போடுகிறான். அவனை நரக
நெருப்பு,
நெருப்பினால் படைக்கப்பட்டவனை
ஒன்றும் செய்து விடாதே.
இதை அல்லாஹ்
கவனிக்கவில்லையா?
வாலிபன் தனது மூன்று கேள்விகள்
கேட்டு முடித்தான்.
உடனே, அறிஞர் வாலிபனின்
முகத்தில்
ஓங்கி அறைந்தார்.
இதை எதிர்பார்க்காத வாலிபன்,
அதிர்ச்சி அடைந்து குழம்பி,
“என்னிடம் நீங்கள்
ஏன் கோபப்படுகிறீர்கள்?” எனக்
கேட்டான்.
“நான் கோபப்படவில்லை”, “நான்
உன்
முகத்தில் அறைந்தது தான் உன்
மூன்று கேள்விகளுக்கு பதில்கள்”
என்றார்
அறிஞர்.
“உண்மையாக எனக்கு ஒன்றும்
புரியவில்லை”
என்றான் வாலிபன்.
அறிஞர் மென்மையாக விளக்க
ஆரம்பித்தார், “ சரி நான்
அறைந்ததை எப்படி உணருகிறாய்?”
எனக்
கேட்டார்.
“ ஆமாம், நான் அதை வலியாக
உணருகிறேன்”, என்றான்.
“அப்படி என்றால்
வலி இருக்கிறது என்பதை நம்புகிறாயா?”
எனக் கேட்டார் அறிஞர்.
“ஆமாம்”
“ஓகே, அதன்
வடிவத்தை எனக்கு காட்டு!” எனக்
வினவினார் அறிஞர்.
“நான் எப்படி காட்டமுடியும்” என
பதில்
தந்தான்.
“இது தான் உன் முதல் கேள்வியின்
பதில்,
இதுபோல் நாம் எல்லாரும்
அல்லாஹ்வின்
உருவத்தை பார்க்காமல் அல்லாஹ்
இருக்கிறான்
என்பதை உணருகிறோம்” என
அமைதியாக அறிஞர் பதில் தந்து,
நேற்று இரவு நான்
இன்று உன்னை அறைவேன்
என உன் கனவில் கண்டாயா?” என
வினவினார் அறிஞர்.
“இல்லை”
“ இன்று உன்னை அறைவேன் என நீ
வேறு என்றாவது நினைத்தது உண்டா?”
எனத்
தொடந்தார்.
“இல்லை”
“இதுதான் தக்திர் (விதி)….” உன்
இரண்டாவது கேள்வியின் பதில்
எனக் கூறி, “
உன்னை அறைந்த என் கை எதனால்
செய்யப்பட்டது” என் வினவினார்.
“அது சதைகளால் செய்யப்பட்டது”
என
பதில் அளித்தான்.
“உன் முகம் எதனால்
செய்யப்பட்டது?”
என மீண்டும் வினவினார் அறிஞர்.
“முகமும் சதையால் உள்ளவையே”
என்றான்.
“நான் அறைந்த பின் நீ
எவ்வாறு உணர்ந்தாய்?”
“வலி” என்றான்.
“சைத்தான் மற்றும் நரக
நெருப்பு இவைகள் நெருப்பால்
உருவாக்கப்பட்டாலும்,
அல்லாஹுதஆலா நாடினால், நரக
நெருப்பும்
சைத்தானுக்கு வேதனை தரும்”.
எனக் கூறி மூன்றாம் கேள்விக்கும்
பதில்
தந்தார்.
ஒரே ஒரு அறை (Slap) யில்
அறிஞர் வாலிபனின்
மூன்று கேள்விகளுக்கு பதில்
அளித்துவிட்டார்.
நீதி: சில விசயங்களை சில
செயல்கள்
வழியே விளங்க வைக்க முடியும்.