கவிஞனே! நெஞ்சம் துடிக்க இடிக்கும் சொல் வீச்சு. வஞ்சம்...
கவிஞனே!
நெஞ்சம் துடிக்க இடிக்கும் சொல் வீச்சு.
வஞ்சம் தீர்க்க உணர்த்தும் வரிகள்.
மஞ்சம் எறிந்துவிட்டு மன்னாருக்கு வாவென
கெஞ்சும் உருக்கம் உதிர்க்கும் கண்ணீர் மொழிகள்!
மிஞ்சும் உயிர்களை கொஞ்சமேனும் காப்போம் வாவென
அஞ்சா நெஞ்சமாய் அறைகூவல் விடுக்கும் அன்பின் அலறல்.
எஞ்சிய கண்ணீரும் எண்ணில் சிந்தாதோ என்னில்!