யார் அவள்..???

யாரோ எவளோ எங்கே என்று
தேடி பார்க்காத நாளில்லை...!!
மெய்யோ பொய்யோ கனவா நனவா
என்று வாடி போகாத நிமிடமில்லை..!!
ஆனால் உந்தன் நினைவுகள் மட்டும்
என்னை உரசி பார்க்குதடி...!!!
வானவில்லின் வண்ணம்
உன்னை தேடவில்லையா...???
தூது போன தென்றல்
உன்னை காணவில்லையா...??
சொல்லி அனுப்பிய வார்த்தை
உன்னை சேரவில்லையா..???
சொல்லிவிடடி பதில் சொல்லிவிடடி
உந்தன் சொல்லில் எந்தன் உயிர்
உன்னை சேருமே...!!??
கண்கள் இருந்தும் உன்னை
காணாத கண்கள் வேண்டாமே.!!
உயிர் இருந்தும் உன்னை
சேராத உயிர் வேண்டாமே...!!!
நினைவிருந்தும் உன்னை
எண்ணாத நினைவு வேண்டாமே..!!
சொல்லிவிடடி பதில் சொல்லிவிடடி
உந்தன் சொல்லில் எந்தன் உயிர்
உன்னை சேருமே....!!??