சோளக்காட்டு பொம்மை

சுடுவானின் சூரியன்
சுடும் நடுவெளியில் நடுமரமாய்....
கருவாச்சியை விரட்ட
அருவாச்சியாய் வைக்கோலுடன்....
பானை மண்டையுடன்
பகட்டு தோற்றம்....
ஜோடி இல்லா நாயகனாய்
தனி நடனம்....
எந்த பாவி பெற்ற சாபமோ!
கைகள் விரிதிட்டபடி
பகலும் இரவும்....
-மூ.முத்துச்செல்வி