நிம்மதியா ஒருவாய் சோறு
நிம்மதியா ஒருவாய் சோறு....
************************************
இரண்டு சின்ன ஊர்...
அதுக்கு இரண்டு தலைவர்கள்...
அந்த
இரண்டுபேருக்கும் இடையே...
போட்டியை விட பொறாமை அதிகமாக இருக்கும்...!!
ஆனா இந்த ரெண்டு பேரின்
நோக்கமும் ஒன்னுதான்...
சின்னதா இருக்குற இந்த ஊர...
எப்படியாவது பெரியதா ஆக்கனும்னு
அனா அதுக்குன்னு
சொந்தமா யோசிக்க தெரியாது...
ஏற்கனவே வளர்ந்த நகரத்த பார்த்து
காப்பி அடிப்பானுங்க...
பக்கத்து ஊர்ல
புதுசா பஸ்டாப் கட்டுனா...
இவனுங்க ஒரு பஸ்டாண்டைய்யே கட்டுவாங்க...
இந்த ரெண்டு தலைவர்ல ஒருவர்
தன்னோட ஊருக்கு
ரயில்வே ஸ்டேசன் கொண்டுவந்தா...!!
இன்னொருவர் தலைவர்
ரயில்வே ஸ்டேசனோட சேர்த்து ஏர்போர்ட்டையும்
கொண்டுவர முயற்சி பண்ணுவார்...
இப்படியே
ஒருத்தர் மேல ஒருத்தர் பொறாமைப்பட்டு
அந்த ஊர்ல
தியேட்டர், காலேஜ், சாப்பிங்மால்ன்னு
எக்கச்சக்கம் வந்துடுச்சி....!!
முந்தி சின்னதா இருந்த ஊர்...
இப்ப
இரண்டும் இரண்டு மடங்கு பெரியதா
வளர்ந்துடுச்சி...
அதனுடைய சுற்றளவும் பெரிசாகிடுச்சி...
ஊர் வளர்ந்ததுனால
எல்லோருக்கும் நல்ல தொழில் கிடைச்சது...!
அந்த ஊர் மக்களும் நிம்மதியா
மூணு வேலையும் நல்லா சாப்பிடுறாங்க...!!
இப்ப ஊருக்குள்ள ஒரே பேச்சி...
"ச்சே நம்ம தலைவர் மாதிரி...
ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும்...
அந்த ஊர் சீக்கிரம் வளர்ந்திடும்..
என்னதான் போட்டி பொறமைன்னு இருந்தாலும்
கடைசில சாதிச்சிட்டாங்கன்னு..."
"முந்திலாம் ஒரு நல்ல நாளுக்கு
நல்ல துணிமணி எடுக்கனும்னா கூட
வேற ஊருக்குத் தான் போகனும்...
ஆனா இப்ப
எல்லாம் நம்ம ஊர்லைய்யே கிடைக்குன்னு..."
இப்படி ஊர் பெருமைய பத்தி
சந்தோஷமா பேசும் மக்கள் ஒரு விசயத்தை
மட்டும் மறந்து போய்ட்டாங்க...!
என்னதான்...
மூணு வேலையும் நிம்மதியா சோறு தின்னாலும்...!
அதுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும்
நம்ம ஊர்லைய்யே கிடைச்சாலும்...!!
அத வெளியூர்லருந்துதான் வாங்கிட்டு வந்து,
இங்க விக்கிறோம் என்பதை...!!!
நமக்கு தேவையான பொருளை
என்று நாமே விளைவிக்கிறோமோ
அன்றுதான் அது வளர்ச்சி...!
ஆனா நாம்
வளர்ச்சிக்காக போராடி போராடி
வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்...!!
இவண்
✒க.முரளி ( spark MRL K)