பணம்

வெற்றுக் காகிதமெனில்

துச்சமென எண்ணக் கூடும்.......

அதற்கே மதிப்பு கூடி

பணம் என ஆகையில்

கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றும்!

பணம் வந்த நொடியில்

உலகையே நம் சுற்றமாக்கும்....

ஆனால்.....

செல்லும் நொடியிலோ

நம்மை தனிமரமாக்கும்.......

உள்ளங்களின் நிறத்தை

உறவின் அடையாளத்தை

வெளிச்சம் போட்டுக் காட்டும்

மாய விளக்கு.....பணம்!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 6:12 am)
பார்வை : 259

மேலே