வணக்கம். 'யாதுமாகி நின்றாள்' - மகளிர் தினத்தை ஒட்டி...
வணக்கம்.
'யாதுமாகி நின்றாள்' - மகளிர் தினத்தை ஒட்டி ப்ரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.
காலமாற்றத்திற்கு ஏற்ப பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள்/மாற்றுக்கருத்துக்கள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் என பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். பரிந்துரைத்த வாசகர்களுக்கு மிக்க நன்றி. தலைப்புகள் பின்வருமாறு :
1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்? நாளைய பெண்கள்? அவர்கள் நிலை எப்படி இருக்க வேண்டும்?
2) இன்றைய பெண்கள் முன்னேற்றம் என நினைப்பது உண்மையில் முன்னேற்றம் தானா? ஆண்களின் அதிகாரம் பெண்கள் முன்னேற்றத்தைத் தடை செய்கிறதா? அதிகாரப் பரவல் உள்ளதா?
3) இணையம் எந்த அளவு மகளிரை மாற்றியுள்ளது, அதனால் மகளிருக்கு மற்றும் அவர்களால் மற்றோர்க்கு உண்டான நன்மை, தீமைகள் என்னென்ன?
கதை, கவிதை, கட்டுரை என எந்த விதமான படைப்புகளையும் அனுப்பலாம்.
போட்டி தொடர்பான எல்லா தகவல்களும் இந்த சுட்டியில் இடம்பெறும் - http://tamil.pratilipi.com/event/yaadhumaagi-nindraal
•அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - tamil@pratilipi.com. மின்னஞ்சலின் தலைப்பு - "யாதுமாகி நின்றாள்" என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்கு பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைத்தால் நலம்.• படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்து தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.• படைப்புகளை MS WORD இல் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode font) மட்டுமே அனுப்பவும். தமிழில் தட்டச்சு செய்ய http://www.google.co.in/inputtools/windows/ எனும் லிங்கில் சென்று google transliteration-ஐ உங்களது கணினியில் தரவிறக்கம் செய்து தமிழை ஆங்கிலத்தில் தட்டச்சு (Type) செய்தாலே தமிழில் காண்பிக்கும் (எ.கா ‘kavithai’ என டைப் செய்தால் கவிதை என கீழே காண்பிக்கும்). அல்லது லதா போன்ற எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.• படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்கு கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.• பரிசுத்தொகை – முதல் பரிசு – 1,500 ரூ ; இரண்டாம் பரிசு – 1000 ரூ ; மூன்றாம் பரிசு – 500 ரூ.• வாசகர்கள் மட்டுமே வெற்றி பெறும் படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள் ( அந்த முறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் ).• படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 31, 2016.
தொடர்புக்கு - +91-9206706899/ +91-7022370004.