அடையாற்றின் பாலங்களும், பண்ணை வீடுகளும் அடையாறு மற்ற நதிகளைப்...
அடையாற்றின் பாலங்களும், பண்ணை வீடுகளும்
அடையாறு மற்ற நதிகளைப் போல, மலைப் பாங்கான இடத்தில் தோன்றவில்லை. மற்ற நதிகளுக்கு, மூலம், மேல் அல்லது நடுப் பகுதி கீழ்ப் பகுதி என்று மூன்று பகுதிகள் உண்டு. அடையாற்றை அவ்வாறு பிரிக்க முடியாது.
மாறாக மொத்த நீரோட்டமும் கீழ்ப் பகுதியாகவே உள்ளது. அதாவது சமவெளியில் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை எடுத்துச் செல்லும் ஒரு நீர்வழித் தடம் தான் அடையாறாக ஓடுகிறது.
மணிமங்கலம் ஏரியில், இதன் துவக்கம் இருந்தாலும், இதன் நீர்வரத்து பல ஏரிகள், குளங்கள்,- முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து தான் துவங்குகிறது.


மாறாக மொத்த நீரோட்டமும் கீழ்ப் பகுதியாகவே உள்ளது. அதாவது சமவெளியில் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை எடுத்துச் செல்லும் ஒரு நீர்வழித் தடம் தான் அடையாறாக ஓடுகிறது.
மணிமங்கலம் ஏரியில், இதன் துவக்கம் இருந்தாலும், இதன் நீர்வரத்து பல ஏரிகள், குளங்கள்,- முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து தான் துவங்குகிறது.


இந்த ஆற்றின் ஆழம், 0.50 மீ., முதல் 0.75 மீ., வரை உள்ளது. ஆற்றுப் படுகை, 10.50 மீ., முதல் 200 மீ., வரை, இடங்களைப் பொறுத்து பெருகியும் குறுகியும் உள்ளது. வங்காள விரிகுடாவில் கலக்கும் இதன் நீர் பரிமாணத்தில், காலத்திற்கு தகுந்தாற்போல மாறுபடுகிறது. மழைக்காலத்தில் அதிகமாகவும் மற்ற மாதங்களில் குறைவாகவும் இருக்கும்.
பல இடங்களில் ஆழம் மிகக் குறைவாக இருப்பதாலும், கோடையில் முற்றிலும் வற்றியே காணப்பட்டதாலும் இந்த ஆற்றைக் கடக்க, பாலங்கள் எதுவும் காலனி ஆட்சிக்கு முன்னர் கட்டப்படவில்லை.
அவ்வாறு காலனி ஆட்சி ஆரம்ப கட்டத்தில் கட்டப்பட்ட கடவு, உண்மையில் ஒரு பாலமல்ல. 'காஸ்வே' என்று ஆங்கிலத்தில் அறியப்பட்ட இந்த மாதிரியான கடவுகள், தரைப்பாலங்கள் என்றழைக்கப்பட்டன. அவை ஆற்றின் நீர்மட்டத்திற்கு ஆற்றைக் கடப்பதற்குத் தகுந்தாற்போல மாட்டுவண்டிகள் செல்லவும் மனிதர்கள் செல்லவும் பயன்பட்டன. வெள்ளம் வரும் போது அவை நீரில் மூழ்கிவிடும்!
அந்த வகையில் முதல் முறையாக அடையாற்றைக் கடக்கக் கட்டப்பட்ட தரைப்பாலம், 'மார்மலாங்க் காஸ்வே'. 'மார்மலாங்க்' என்பது மாம்பலம் என்பதின் திரிபு. மாம்பலம் என்ற பெயரே மஹாபில்வக்ஷேத்திரம் என்ற பெயரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சரித்திரச் சான்று கிடைக்கவில்லை.
மார்மலாங்க் காஸ்வே ( 1)
ஆர்மேனியர்கள் (அரண்மனைக்காரர்கள் என்ற வழிமொழிச் சொல்லிலும் அறியப்பட்டவர்கள்) மதராசுக்கு, 1666ம் ஆண்டிலேயே வந்துவிட்டனர். இப்போது அந்த வம்சாவளியில் சென்னையில் அதிகமாக எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.
பெர்ஷியாவிலிருந்து வந்த இந்த வணிகர்கள், மதராஸ் வணிகத்தில், முக்கியமாக விலையுயர்ந்த கற்கள், துணிமணிகள் ஏற்றுமதியில் பங்கு பெற்றனர். 1688ம் ஆண்டில் இருந்து, கம்பெனி வணிகத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
அவர்களில் ஒரு சிறந்த வணிகப் பெருமகன், கோஜா பெட்ரஸ் உஸ்கான் என்பவர். அவர்தான், 1726ம் ஆண்டில், 'மார்மலாங்க்' தரைப்பாலத்தைக் கட்டியவர். அதற்கான சான்று இருமொழிக் கல்வெட்டுச் சாசனமாக இன்றும் காணக் கிடைக்கிறது.
கத்தோலிக்கரான இவர்தான், பரங்கிமலையில் ஏறுவதற்கு வசதியாகப் படிகளும் கட்டியவர். பாலமும் அந்த படிகளும் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டன. 'உஸ்கான் அறக்கட்டளை' அவர் உருவாக்கியது தான். அதற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன.
அவர், 1751, ஜனவரி 15 அன்று காலமானார்; உடல் வேப்பேரியில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அன்று கட்டிய அந்த பாலம், 196௬ம் ஆண்டில், முழு பாலமாக மாற்றப்பட்டு, மறைமலை அடிகள் பாலம் என, பெயரும் மாற்றப் பட்டது.
கி.பி., 18ம் நூற்றாண்டில் தரைப்பாலம் கட்டிய பிறகு தான் அடையாற்றைக் கடக்கும் வசதிகள் ஏற்பட்டன. முக்கியமாகக் கத்தோலிக்கர்கள் தான் அந்த பாலத்தைப் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் அப்போது அந்த வடகரையில், அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. வடக்கு, கிழக்குப் பகுதிகள் சையதுகான் என்பவர் கைவசம் வந்தது. அவர் பெயரால், பின்னாளில் சையதுகான் பேட்டையாகிக் காலப்போக்கில் சைதாப்பேட்டையாகப் பரிணமித்தது.
அடையாற்றின் இரண்டாவது பாலம்
எல்பின்ஸ்டன் என்பவர்,1837- 1842ம் ஆண்டு வரை, மதராசின் கவர்னராக இருந்தார். இவர் தான் மெரீனா கடற்கரையை உருவாக்கியவர். 1840ம் ஆண்டில், அடையாற்றில் இரண்டாவது பாலம் கட்டப்பட்டு, அதற்கு இவரது பெயரும் சூட்டப்பட்டது. இந்த பாலம் தான், 1973ல், 58 லட்சம் ரூபாய் செலவில், திரு.வி.க., பாலமாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த பாலத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பழைய பாலம் இன்றும் உள்ளது.
கடந்த, 1876- 78 காலகட்டத்தில் ஒரு பெரும் புயல் மதராசைத் தாக்கியபோது பழைய பாலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பாலத்தின் ஒரு தூண் புயலால் தகர்க்கப்பட்டது.
கடந்த, 1840ம் ஆண்டு வரை, அடையாற்றின் வடபகுதியில் தான் பண்ணை இல்லங்கள் கட்டப்பட்டன. கைமாறி விட்ட வீடுகளில் பல, இப்போது அரசுக்குச் சொந்தமாக உள்ளன. சில, தனியார் வசமுள்ளன. இன்று போட்கிளப் இயங்குமிடம், 1892ம் ஆண்டு வரை ஒரு ஆங்கிலேயருக்குச் சொந்தமான பண்ணை வீடாகத்தான் அடையாற்றை ஒட்டி இருந்தது.
மற்றொன்று 'யெர்ரோலைட்' என்ற பெயர் கொண்டது. இன்று அங்குதான் ஆந்திர மஹிள சபா உள்ளது. சற்றே வடபுறம் இருந்த, 'பக் ஹவுஸ்' இப்போது, சத்ய சாய்பாபா பிரார்த்தனை மையமாக செயல்படுகிறது.
இந்த பாலம் கட்டிய பின், அடையாற்றின் தெற்குப் பகுதி ஆங்கிலேயர்களின் ஆவலைத் தூண்டியது. அவ்வாறு தெற்குக் கரையில், கடற்கரையருகில் கட்டப்பட்ட இல்லங்களில் முக்கியமானது, 27 ஏக்கரில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம். 1780ம் ஆண்டில், ஜான் ஹட்டல்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. அதே போல தென்கரையில், சிறிதே மேற்கில், எல்பின்ஸ்டன் தோட்டம் உருவானது.
ஆக இந்த இரண்டு கட்டடங்கள் தான், எல்பின்ஸ்டன் பாலத்தின் தெற்கில் இரு மருங்கிலும் இருந்தன. வேறு பெரிய வீடுகள் எதுவும் கிடையாது. 19ம் நூற்றாண்டில், அன்றைய அரசு அலுவலகங்கள் உதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டன. அதனால், கேட்பாரற்று இருந்த இந்த தோட்ட வீடுகளும், முதல் வாய்ப்பு கிடைத்தபோது விற்கப்பட்டன.
தியாசபிகல் சொசைட்டி
வரலாறு எதிர்பாராத திருப்பங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் ஒன்று அடையாறு தியாசபிகல் சொசைட்டி மதராசுக்கு வந்த நிகழ்வு.
அதன் துவக்கம் அமெரிக்காவில். ரஷ்யப் பெண்மணியான ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கியும், கர்னல் ஹென்றி ஆல்காட் என்பவரும், தியாசபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபையை அமெரிக்காவில், 1875ல் நிறுவினர்.
இந்தியாவில் அந்த சபையின் தலைமையகத்தை நிறுவ நாட்டம் கொண்ட அவர்கள், ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். பம்பாய், காசி முதலிய இடங்களில் சில நாட்கள் கழித்த பின், காசியிலிருந்து மதராஸ் வந்த அவர்கள், ஹட்டல்ஸ்டோன் கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போதைய நிலையில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம் இயற்கையின் சொல்லொணா அழகுடையதாய் இருந்திருக்க வேண்டும். அமைதியான சுற்றுச்சூழலையும் அழகையும் ஒரு பெரிய ஆலமரத்தையும் தன்னுள் கொண்டிருந்த அந்த பகுதி, மேலை நாட்டினரை ஈர்க்கும் தன்மையுடையதாகவும் இருந்தது.
அப்போது சிறிது விரிவாக்கப்பட்டு, மொத்தமாக, 30 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டிருந்த அந்த பண்ணையில் இரு வீடுகளும் இருந்தன. அவற்றின் மதிப்பு அன்று, 600 சவரன் அதாவது இந்திய மதிப்பில், 8,500 ரூபாய் என்று தெரிந்து கொண்ட இருவரும், சற்றும் தாமதியாமல், வாங்கி விட்டனர். பத்திரம், 1882, நவம்பர் 17ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதை முடித்துக் கொடுத்தவர் இந்திய சபை உறுப்பினர் பி. அய்யலு நாயுடு என்பவர்! அந்த நாள் தான் இன்றும் சபையின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 20ம் நூற்றாண்டில் அதன் பரப்பளவு, 250 ஏக்கராக ஆகிவிட்டது. மற்றும் பல கட்டடங்களும் கட்டப்பட்டன. பல தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. அவை ஆல்காட், பெசன்ட், தாமோதர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.
இதனால் உண்டான மிகப்பெரிய பயன் என்னவெனில், அடையாறு டெல்டா நன்கு பராமரிக்கப்பட்டது. அங்கு பெரும் கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பப்படவில்லை ஆதலால். பறவைகள் சரணாலயமும் காக்கப்பட்டது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது. இல்லையெனில் அந்த பகுதியும் அதன் வடகரையைப் போல, முற்றிலும் பாழாகியிருக்கும்.
அதேபோல சற்றே மேற்கில், அடையாற்றின் தென்கரையில், 'எல்பின்ஸ்டன் பார்க்' என்ற ஒரு தோட்ட வீடும் இருந்தது. அதன் பரப்பளவு அந்த காலத்தில், 158 ஏக்கர். ஆற்றை நோக்கிய ஒரு பெரிய பங்களாவும் இருந்தது.
காந்தி நகர்
அயர்லாந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மதராசில், 1875ல் துவக்கப்பட்ட ஒரு நிறுவனம், 'பேட்ரீஷியன் பிரதர்ஸ்'. டாக்டர் பென்னலி என்ற மதராசின் அன்றைய ஆர்ச் பிஷப், இவர்களை கத்தோலிக்க அனாதை நிறுவனத்தை பராமரிக்க அழைத்தார். சகோதரர் பால் ஹ்யூஜஸ் மற்றும் சகோதரர் பிண்டன் பார்க்கின்சன் என்ற இரு அயர்லாந்து நாட்டவர், இந்தியா வந்தனர்.
அந்த நிறுவனம் ஆர்மேனியத் தெருவில் இயங்கிக் கொண்டிருந்தது. அதற்காக பெரிய இடம் தேடிக் கொண்டிருந்த செயின்ட் பேட்ரிக் சொசைட்டிக்கு, இந்த, 1158 ஏக்கர் நிலமும் பங்களாவும், 1885, ஜூலை 1ம் தேதி அன்று ஆங்கிலேயரால், விற்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த, ஆர்ச் பிஷப்புடன் நேர்ந்த சச்சரவால் பரப்பளவு குறைக்கப்பட்டது.
சிறு சிறு பகுதிகளாக விற்கப்பட்டு பின்னர் காந்தி நகர் கட்டட சொசைட்டிக்கு பெரும் பகுதி விற்கப்பட்டது. அப்படி சென்னையில் சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதல் புறநகர்ப் பகுதி தான் காந்தி நகர்.
இன்றும் செயின்ட் பேட்ரிக் பள்ளி வளாகத்தில், பழைய ஆங்கிலேயர் கட்டிய விடுதி அப்படியே பராமரிக்கப்படுகிறது. அதற்கு அருகில் அடையாற்றங்கரையில் இக்கட்டடத்தின் வரலாறு கூறும் கல்வெட்டு, 1950களில் ஏற்பட்ட மாற்றங்களால் மறைந்து விட்டது.
தொடர்புக்கு: நரசய்யா, (கட்டுரையாளர், எழுத்தாளர், ஆய்வாளர்); narasiah267@gmail.com
பல இடங்களில் ஆழம் மிகக் குறைவாக இருப்பதாலும், கோடையில் முற்றிலும் வற்றியே காணப்பட்டதாலும் இந்த ஆற்றைக் கடக்க, பாலங்கள் எதுவும் காலனி ஆட்சிக்கு முன்னர் கட்டப்படவில்லை.
அவ்வாறு காலனி ஆட்சி ஆரம்ப கட்டத்தில் கட்டப்பட்ட கடவு, உண்மையில் ஒரு பாலமல்ல. 'காஸ்வே' என்று ஆங்கிலத்தில் அறியப்பட்ட இந்த மாதிரியான கடவுகள், தரைப்பாலங்கள் என்றழைக்கப்பட்டன. அவை ஆற்றின் நீர்மட்டத்திற்கு ஆற்றைக் கடப்பதற்குத் தகுந்தாற்போல மாட்டுவண்டிகள் செல்லவும் மனிதர்கள் செல்லவும் பயன்பட்டன. வெள்ளம் வரும் போது அவை நீரில் மூழ்கிவிடும்!
அந்த வகையில் முதல் முறையாக அடையாற்றைக் கடக்கக் கட்டப்பட்ட தரைப்பாலம், 'மார்மலாங்க் காஸ்வே'. 'மார்மலாங்க்' என்பது மாம்பலம் என்பதின் திரிபு. மாம்பலம் என்ற பெயரே மஹாபில்வக்ஷேத்திரம் என்ற பெயரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சரித்திரச் சான்று கிடைக்கவில்லை.
மார்மலாங்க் காஸ்வே ( 1)
ஆர்மேனியர்கள் (அரண்மனைக்காரர்கள் என்ற வழிமொழிச் சொல்லிலும் அறியப்பட்டவர்கள்) மதராசுக்கு, 1666ம் ஆண்டிலேயே வந்துவிட்டனர். இப்போது அந்த வம்சாவளியில் சென்னையில் அதிகமாக எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.
பெர்ஷியாவிலிருந்து வந்த இந்த வணிகர்கள், மதராஸ் வணிகத்தில், முக்கியமாக விலையுயர்ந்த கற்கள், துணிமணிகள் ஏற்றுமதியில் பங்கு பெற்றனர். 1688ம் ஆண்டில் இருந்து, கம்பெனி வணிகத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
அவர்களில் ஒரு சிறந்த வணிகப் பெருமகன், கோஜா பெட்ரஸ் உஸ்கான் என்பவர். அவர்தான், 1726ம் ஆண்டில், 'மார்மலாங்க்' தரைப்பாலத்தைக் கட்டியவர். அதற்கான சான்று இருமொழிக் கல்வெட்டுச் சாசனமாக இன்றும் காணக் கிடைக்கிறது.
கத்தோலிக்கரான இவர்தான், பரங்கிமலையில் ஏறுவதற்கு வசதியாகப் படிகளும் கட்டியவர். பாலமும் அந்த படிகளும் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டன. 'உஸ்கான் அறக்கட்டளை' அவர் உருவாக்கியது தான். அதற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன.
அவர், 1751, ஜனவரி 15 அன்று காலமானார்; உடல் வேப்பேரியில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அன்று கட்டிய அந்த பாலம், 196௬ம் ஆண்டில், முழு பாலமாக மாற்றப்பட்டு, மறைமலை அடிகள் பாலம் என, பெயரும் மாற்றப் பட்டது.
கி.பி., 18ம் நூற்றாண்டில் தரைப்பாலம் கட்டிய பிறகு தான் அடையாற்றைக் கடக்கும் வசதிகள் ஏற்பட்டன. முக்கியமாகக் கத்தோலிக்கர்கள் தான் அந்த பாலத்தைப் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் அப்போது அந்த வடகரையில், அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. வடக்கு, கிழக்குப் பகுதிகள் சையதுகான் என்பவர் கைவசம் வந்தது. அவர் பெயரால், பின்னாளில் சையதுகான் பேட்டையாகிக் காலப்போக்கில் சைதாப்பேட்டையாகப் பரிணமித்தது.
அடையாற்றின் இரண்டாவது பாலம்
எல்பின்ஸ்டன் என்பவர்,1837- 1842ம் ஆண்டு வரை, மதராசின் கவர்னராக இருந்தார். இவர் தான் மெரீனா கடற்கரையை உருவாக்கியவர். 1840ம் ஆண்டில், அடையாற்றில் இரண்டாவது பாலம் கட்டப்பட்டு, அதற்கு இவரது பெயரும் சூட்டப்பட்டது. இந்த பாலம் தான், 1973ல், 58 லட்சம் ரூபாய் செலவில், திரு.வி.க., பாலமாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த பாலத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பழைய பாலம் இன்றும் உள்ளது.
கடந்த, 1876- 78 காலகட்டத்தில் ஒரு பெரும் புயல் மதராசைத் தாக்கியபோது பழைய பாலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பாலத்தின் ஒரு தூண் புயலால் தகர்க்கப்பட்டது.
கடந்த, 1840ம் ஆண்டு வரை, அடையாற்றின் வடபகுதியில் தான் பண்ணை இல்லங்கள் கட்டப்பட்டன. கைமாறி விட்ட வீடுகளில் பல, இப்போது அரசுக்குச் சொந்தமாக உள்ளன. சில, தனியார் வசமுள்ளன. இன்று போட்கிளப் இயங்குமிடம், 1892ம் ஆண்டு வரை ஒரு ஆங்கிலேயருக்குச் சொந்தமான பண்ணை வீடாகத்தான் அடையாற்றை ஒட்டி இருந்தது.
மற்றொன்று 'யெர்ரோலைட்' என்ற பெயர் கொண்டது. இன்று அங்குதான் ஆந்திர மஹிள சபா உள்ளது. சற்றே வடபுறம் இருந்த, 'பக் ஹவுஸ்' இப்போது, சத்ய சாய்பாபா பிரார்த்தனை மையமாக செயல்படுகிறது.
இந்த பாலம் கட்டிய பின், அடையாற்றின் தெற்குப் பகுதி ஆங்கிலேயர்களின் ஆவலைத் தூண்டியது. அவ்வாறு தெற்குக் கரையில், கடற்கரையருகில் கட்டப்பட்ட இல்லங்களில் முக்கியமானது, 27 ஏக்கரில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம். 1780ம் ஆண்டில், ஜான் ஹட்டல்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. அதே போல தென்கரையில், சிறிதே மேற்கில், எல்பின்ஸ்டன் தோட்டம் உருவானது.
ஆக இந்த இரண்டு கட்டடங்கள் தான், எல்பின்ஸ்டன் பாலத்தின் தெற்கில் இரு மருங்கிலும் இருந்தன. வேறு பெரிய வீடுகள் எதுவும் கிடையாது. 19ம் நூற்றாண்டில், அன்றைய அரசு அலுவலகங்கள் உதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டன. அதனால், கேட்பாரற்று இருந்த இந்த தோட்ட வீடுகளும், முதல் வாய்ப்பு கிடைத்தபோது விற்கப்பட்டன.
தியாசபிகல் சொசைட்டி
வரலாறு எதிர்பாராத திருப்பங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் ஒன்று அடையாறு தியாசபிகல் சொசைட்டி மதராசுக்கு வந்த நிகழ்வு.
அதன் துவக்கம் அமெரிக்காவில். ரஷ்யப் பெண்மணியான ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கியும், கர்னல் ஹென்றி ஆல்காட் என்பவரும், தியாசபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபையை அமெரிக்காவில், 1875ல் நிறுவினர்.
இந்தியாவில் அந்த சபையின் தலைமையகத்தை நிறுவ நாட்டம் கொண்ட அவர்கள், ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். பம்பாய், காசி முதலிய இடங்களில் சில நாட்கள் கழித்த பின், காசியிலிருந்து மதராஸ் வந்த அவர்கள், ஹட்டல்ஸ்டோன் கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போதைய நிலையில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம் இயற்கையின் சொல்லொணா அழகுடையதாய் இருந்திருக்க வேண்டும். அமைதியான சுற்றுச்சூழலையும் அழகையும் ஒரு பெரிய ஆலமரத்தையும் தன்னுள் கொண்டிருந்த அந்த பகுதி, மேலை நாட்டினரை ஈர்க்கும் தன்மையுடையதாகவும் இருந்தது.
அப்போது சிறிது விரிவாக்கப்பட்டு, மொத்தமாக, 30 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டிருந்த அந்த பண்ணையில் இரு வீடுகளும் இருந்தன. அவற்றின் மதிப்பு அன்று, 600 சவரன் அதாவது இந்திய மதிப்பில், 8,500 ரூபாய் என்று தெரிந்து கொண்ட இருவரும், சற்றும் தாமதியாமல், வாங்கி விட்டனர். பத்திரம், 1882, நவம்பர் 17ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதை முடித்துக் கொடுத்தவர் இந்திய சபை உறுப்பினர் பி. அய்யலு நாயுடு என்பவர்! அந்த நாள் தான் இன்றும் சபையின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 20ம் நூற்றாண்டில் அதன் பரப்பளவு, 250 ஏக்கராக ஆகிவிட்டது. மற்றும் பல கட்டடங்களும் கட்டப்பட்டன. பல தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. அவை ஆல்காட், பெசன்ட், தாமோதர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.
இதனால் உண்டான மிகப்பெரிய பயன் என்னவெனில், அடையாறு டெல்டா நன்கு பராமரிக்கப்பட்டது. அங்கு பெரும் கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பப்படவில்லை ஆதலால். பறவைகள் சரணாலயமும் காக்கப்பட்டது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது. இல்லையெனில் அந்த பகுதியும் அதன் வடகரையைப் போல, முற்றிலும் பாழாகியிருக்கும்.
அதேபோல சற்றே மேற்கில், அடையாற்றின் தென்கரையில், 'எல்பின்ஸ்டன் பார்க்' என்ற ஒரு தோட்ட வீடும் இருந்தது. அதன் பரப்பளவு அந்த காலத்தில், 158 ஏக்கர். ஆற்றை நோக்கிய ஒரு பெரிய பங்களாவும் இருந்தது.
காந்தி நகர்
அயர்லாந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மதராசில், 1875ல் துவக்கப்பட்ட ஒரு நிறுவனம், 'பேட்ரீஷியன் பிரதர்ஸ்'. டாக்டர் பென்னலி என்ற மதராசின் அன்றைய ஆர்ச் பிஷப், இவர்களை கத்தோலிக்க அனாதை நிறுவனத்தை பராமரிக்க அழைத்தார். சகோதரர் பால் ஹ்யூஜஸ் மற்றும் சகோதரர் பிண்டன் பார்க்கின்சன் என்ற இரு அயர்லாந்து நாட்டவர், இந்தியா வந்தனர்.
அந்த நிறுவனம் ஆர்மேனியத் தெருவில் இயங்கிக் கொண்டிருந்தது. அதற்காக பெரிய இடம் தேடிக் கொண்டிருந்த செயின்ட் பேட்ரிக் சொசைட்டிக்கு, இந்த, 1158 ஏக்கர் நிலமும் பங்களாவும், 1885, ஜூலை 1ம் தேதி அன்று ஆங்கிலேயரால், விற்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த, ஆர்ச் பிஷப்புடன் நேர்ந்த சச்சரவால் பரப்பளவு குறைக்கப்பட்டது.
சிறு சிறு பகுதிகளாக விற்கப்பட்டு பின்னர் காந்தி நகர் கட்டட சொசைட்டிக்கு பெரும் பகுதி விற்கப்பட்டது. அப்படி சென்னையில் சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதல் புறநகர்ப் பகுதி தான் காந்தி நகர்.
இன்றும் செயின்ட் பேட்ரிக் பள்ளி வளாகத்தில், பழைய ஆங்கிலேயர் கட்டிய விடுதி அப்படியே பராமரிக்கப்படுகிறது. அதற்கு அருகில் அடையாற்றங்கரையில் இக்கட்டடத்தின் வரலாறு கூறும் கல்வெட்டு, 1950களில் ஏற்பட்ட மாற்றங்களால் மறைந்து விட்டது.
தொடர்புக்கு: நரசய்யா, (கட்டுரையாளர், எழுத்தாளர், ஆய்வாளர்); narasiah267@gmail.com