எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆன்மீகத் தேடல் !!!


கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , தாராசுரம் அருகே , தாராசுரம் வழி பட்டீஸ்வரம் கோயிலுக்கு போகும் முகப்பில் ஐராதீஸ்வரர் கோயில் பின்புறம் அமைந்து உள்ளது அருள்மிகு பத்ர காளி அம்மன் உடனுறை அருள்மிகு வீர பத்திரர் திருக்கோயில் .

இந்த திருத்தளம் குடந்தையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது .

நான் நடை பழக்கமாக தினமும் ஐரா தீஸ்வரர் கோயிலுக்கு செல்லுவது வழக்கம் , அவ்வாறு செல்லும் பொழுது இந்த கோயிலை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன் .

கோயில் பழமையானது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டன.

பாழ் அடைந்த கோபுரம் , ஆனால் சீரடைந்து வருகிறது. இதற்கு காரண கார்த்த அங்கு வசிக்கும் ஒரு பக்தர் .

அவ்வாறாக நான் , ஒரு நாள் காலை சென்ற போது , கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது .

பூசாரி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார் . நான் கோயில் மூலவரை வணங்கினேன் . பிறகு பின்புறம் சென்ற போது , என்னை கூப்பிட்டு , அங்கே இருப்பது ஒட்டக்கூத்தர் சமாதி என்றும் , அவர் அங்கே சித்தமாகி இருக்கிறார் என்று கூறினார் .

சித்தர் பீடம் மூலஸ்தானத்தில் இருந்து சற்று தெற்கே அமைந்து உள்ளது. சித்தர் பீடத்தை சுற்றி புது சமாதி அமைத்து இருந்தார்கள் .

கவிச்சக்ரவர்தி , இங்கே அமர்ந்து பல பாடல்களை பாடி இருக்கிறார். அதில் இந்த ஊரைப் பற்றிய குறிப்புகளும் பல உள .

இதில் உள்ள உண்மையை என்னால் உணர முடிந்தது . கால காலமாக தமிழை வளர்த்த புலவர்களுக்கு பொற்குவியலை அரச மாமன்னர்கள் கொடையாக கொடுத்ததும் , மேலும் அருள் வாக்கு பெற்றதும் , அந்த சிந்தனையில் கிடைத்த கருவூலங்கள் நமக்கு புதுப் புது அர்த்தங்களையும் , வாழ்வியலையும் என்றென்றும் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன.

கவியை வணங்கி சற்று முன்னோக்கி நடந்தேன் . அங்கே வடக்கே ஒரு உயர்ந்த புற்றும் , அதைச் சுற்றி ஒரு வளைவான பிரகாரமும் என்னை வரவேற்றன .

சுற்றி வந்து அமர்ந்தேன் . தியாணம் செய்தேன்.

கடைசியாக பூசாரி நீலகண்டனிடம் ( 8680828922) உரையாடினேன் .

அது அகஸ்தியரின் சிஸ்யர் ஸ்ரீ ரெவன சித்தர் அடக்க மாகிய இடம் என்று கூறினார் .

பிரமிப்புடன் சென்ற எனக்கு பல கேள்விகள் எழுந்தன . எல்லாவற்றிற்கும் ஆன பதிலை அவரிடன் தேடிக் கொண்டேன்.

இந்த கோயிலைப் பற்றி என்ன எழுதுவது என்ற எண்ணம் உதித்த பொழுது என்னிடம் எந்த குறிப்பேடும் இல்லை.

இப்படி சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதற்கு பிறகு நடந்த ஒரு சம்பவம் .

பூசாரியை சந்தித்தேன் . உரையாடினேன் . விடை பெற்றேன் . அவர் அங்கு உள்ள கலசத்கிற்கு வர்ணம் இட பணம் தேவைப் படுகிறது என்று கூறினார் . என் மனதில் அதை உள் வாங்கிக் கொண்டேன் .

எப்படி என் எண்ணங்களை பகிர்வது என்று நினைக்கும் பொழுது என் பார்வை விரிய வில்லை .

ஆனால் அந்த எண்ணம் மட்டும் என் இதயத்தை சற்று உருத்திக் கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

நான் பார்த்தேன் , ஆனால் புரிதல் இல்லை .

புரிதலுக்கு தேடுதல் அவசியம் என்பது மட்டும் என் எண்ண ஓட்டமாக இருந்தது.

ஓட்டத்தை முன் நிறுத்தினேன் . எண்ணங்கள் குவியலாகின.

குவியலை சரி செய்தேன் . சரி செய்ததின் விளைவு நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .

விளைவை நோக்கிய பயணம் தொடரும் ......,,,,


மேலும்

சிஷ்யன் = குருவே உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?


குரு = கேளு மைந்தா


சிஷ்யன் = படைப்பு கடவுள் யார்?  விஷ்ணு நாபியில் தோன்றிய  நான்கு முகம் கொண்ட பிரம்ம தேவன் என்கிறார்களே, அதுவும் அல்லாமல் பிரம்ம தேவனுக்கு கோவில் இல்லை என்று சொல்கிறார்கள் எதனால்?  என் சந்தேகம் தீர  இதன் உண்மையை தன்மையை விளக்குங்கள்

குரு = மைந்தா, விஷ்ணு என்பது நம்முடைய மனம் ஆகும், அந்த மனதில் இருந்து தோன்றிய அகங்காரம் பிரம்மாவாகும், ஆங்காரம் வழிபடக்கூடிய வணங்கத் தக்கது அல்ல என்று பொருள்படவே பிரம்மனுக்கு கோயில் இல்லை என்று சொல்லக் காரணம்,


சிஷ்யன் = குருவே அப்போது அந்த நான்கு முகங்கள் எதை குறிக்கிறது


குரு = மைந்தா முகம் என்றால் வழி என்று பொருள், விஷ்ணுவாகிய மனதில் இருந்து தோன்றிய பிரம்மா ஆகிய அகங்காரம் நான்கு வழிகளில் வெளிப்படுகிறது,  அவை மனம், சித்தம்,  புத்தி,  அகங்காரம் ஆகும். இந்த நான்கு வழிகளைத் தான் நான்கு முகங்களாக பிரம்மாவிற்கு குறிப்பிடப்படுகிறது,


சிஷ்யன் = இந்த நான்கின் விளக்கம் என்ன குருவே?


குரு  =   ஒரு விதையை மண்ணில் போட்டவுடன் மனம் சித்தம் என்று சொல்லக்கூடிய இரண்டு நிலைகளாக  பிளக்கிறது, மூன்றாவதாக ஒரு இலை விடும்போதுதான் அது இந்த இனத்தைச் சேர்ந்தது என தெரிய வருகிறது, இதே புத்தி என்று சொல்லப்படுகிறது, இதைத்தான் நாம் சிறுவர்களை பார்த்து முளைத்து மூன்று இலை விடவில்லை அதற்குள் இவ்வளவு பேசுகிறானே என்று சொல்கிறோம், அதாவது புத்தி வளர்ச்சி அடைவதற்குள் என்று பொருள்,  அந்த மூன்றாவது இலை என்பது  புத்தியை குறிக்கும், நான்காம் நிலை அகங்காரம் ஆகும்,


சிஷ்யன் = குருவே அகங்காரம் என்பது கர்வமும், திமுறும் தானே


குரு  =  இல்லை மைந்தா, குழந்தை பசித்தால் அழவும், பால் கொடுத்தால் குடிக்கவும் தயாராக இருக்கிறது இப்போது மனம் சித்தம் இரண்டு மட்டும் உள்ளது, இந்த பாலை யார் தருகிறார்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? அருகில் இருப்பவர்கள் யார்? என்று எந்த விவரமும் அறியாது, காரணம்  புத்தி இன்னும் வரவில்லை, பின் சிறிது காலத்தில் இவளிடம் இருந்து தான் பால் வருகிறது என்றும், இவள் நமக்கு உறவு என்றும் அறியும் பொருட்டே புத்தி வளர்ச்சி அடைகிறது,  இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அறிந்து தனது புத்தியை வளர்த்துக் கொள்கிறது. இந்நிலையில் தன்னை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணம் அதற்கு இல்லை, எப்போது அந்த குழந்தை தனக்கான உணவை தானே உண்ணுகிறதோ அப்போது நான் என்று செல்லக்கூடிய அகங்காரம்  வளருகிறது, தன்னை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தி அறியும் தன்மைக்கே அகங்காரம் என்று பெயர்,


அகங்காரமாய் இருக்கக்கூடிய பிரம்மா இந்த நான்கு முகங்களை வைத்துக் கொண்டு உலகத்தில் சிருஷ்டி செய்கிறார் என்று சொல்லப்பட காரணம்,


அகங்காரம் வரும் வரைக்கும் குழந்தையாக இருக்கும் பின் அக்குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு தன்னை தாயாகவும் அந்த பொம்மையை தமக்கு பிள்ளையாக பாவித்து தம்மை எவ்விதம் செய்தார்களோ அவ்விதமே அந்த பொம்மையிடம் செய்து சிருஷ்டிக்க தொடங்கும்,


ஆக சிருஷ்டிக்க  செய்யக்கூடிய நிலை அகங்காரத்திற்கே ஆகும், அந்த அகங்காரமே பிரம்மா எனப்பட்டது, அகங்காரமாய் இருக்கக்கூடிய பிரம்மாவின் உற்பத்தியானது மனமாய் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்துதான், அந்த மனமாய் இருக்கக்கூடிய மகாவிஷ்ணு ஜீவனாகிய சிவத்தில் ஒடுங்க கூடியவர் என்பதை தெரிந்து கொள்,  மைந்தா


சிஷ்யன் = தெளிவடைந்தேன் குருவே, நமது ஜீவனே சிவன் என்றும்,  மனமே மகாவிஷ்ணு என்றும்,  நம்மை வேறுபடுத்திப் பார்க்க கூடிய அகங்காரம் பிரம்மா என்றும் தங்கள் அருளால் தெரிந்துகொண்டேன் குருவே


                 அப்துல் கரீம் "ponnu" 🥢

மேலும்

கண்ணதாசன் எழுதிய சிவன் பாடல்  


மேலுள்ள வரியை க்ளிக் செய்யவும். நன்றி!

சிவன் பாடல். எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மேலும்

எழுத்தின் மீது செய்யவும். நன்றி 14-Nov-2021 11:29 pm
எங்கே யந்த .....பாடல்.... என்றே என்மனம். பாடலைத் தேடுதே ஆவலாய்த் த 15-Sep-2021 6:30 pm

பரம் ஜோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதயத்தில் இருந்து நழுவிச் செல்ல விட்டு விடுகிறார்கள் பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும் கருப்ப கிரகங்களிலும் லட்ச தீபம் ஏற்றி அந்த பரஞ்சோதியை தேடுகிறார்கள்
மனிதர்களைப்போல வானமாதேவி யும் புத்திசாலிதனத்தில் மனிதகுலத்தை ஒத்தவர் போலும்.
ஜோதிமயமான சூரியபகவானை தன் வசத்தில் இருந்து கடலில் நழுவ விட்டு விடுகிறாள் பிறகு தன் நாதனை காணவில்லையே என்று கவலை அவளுக்கு உண்டாகிறது லட்ச தீபம் ஏற்றி சூரியனை தேடுகிறார் லட்ச தீப மட்டுமா ஏற்றுகிறார் கோடான கோடி தூங்கா விளக்குகளை ஏற்றி இரவெல்லாம் அவளும் தூங்காமல் சூரியனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்

மேலும்

இறைவன் திருப்பாடல் எண்: 7  எல்லோருக்கும் பயன்படும்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன். 


மேலும்


மேலே