எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்டுக் கோவிலாம் கட்டுக்கடங்கா காலபைரவனின் மறுக்கவியலா கட்டளையாம்
வீட்டிற்கு பகையகல தோட்டத் தொழுவத்தில் எனக்கு சிறைக்காவலாம்...

சிலநூறு மதிப்புதானாம் எனதுடலை கூறுபோட
பலவாறு கணக்கிட்டான் அறுசுவையில்  விருந்துபடைக்க...

நல்லநேரம் நகர்ந்துவர நாடியடைத்த நரகபயத்தில் என் நாசிபுடைக்க
மெல்லநடந்தால் மட்டுமென்ன கொள்ளவந்தவன் அவனது கொல்லைக்கா கொண்டுபோவான்...?

சந்ததியோடு சங்கமித்து சலங்கைகட்டி எனை அழகுபார்த்தது
சந்தர்பம்பார்த்து சங்கறுத்து சமையல் செய்யத்தானா...?

கொதிநீர் கொப்பரையில் வெந்துநோகும் அக்கரையில் புழுக்கள்மேயும்
நதிநீர் நடைகரையில் நாற்றமெடுத்து நாசிவழி சுவாசித்தீர்களானால்...

குரல்வளையைக் குத்திக்கிழித்து குருதியினைக் கொப்பரையில்வாட்டி
எனதுடலை உண்டுநீங்கள் உமதுடலை வளர்ப்பதென்ன நியாயம்...?

கிழிந்திடா நெகிழிப் பறைகள் எங்களது தோள்களுக்கு ஈடானால்
அழிந்திடாது பறைமுழக்கம் மீட்டியவனைக் கேட்டுப்பார்...!

#பதறும்_பலியாடு_இறுதியாய்_அசைபோடுகிறது

மேலும்

மிக்க நன்றி ஐயா 14-Oct-2017 8:05 pm
சமரச சன்மார்க்கம் திரு இராமலிங்க அடிகளார் அறிவுரை இன்றைய காலத்துக்கு ஏற்றாற்போல விழிப்பு உணர்வுப் படைப்புகள் படைப்போம் பகிர்வோம் விவாதிப்போம் சிந்திப்போம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 14-Oct-2017 1:16 am

மேலே