எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  நண்பர்களுக்கு வணக்கம்..! 


கடந்த வருடத்திலிருந்து இனி ஒவ்வொரு ஆண்டும் அய்யா பெரியாரின் பிறந்த தினத்தினை ஒட்டி முழுநாள் நிகழ்வு நடத்தப்படும் என்று #வாசகசாலை முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி முதலாவது முழுநாள் நிகழ்வு கடந்த 17.09.2017 அன்று ஐந்து அமர்வுகளாக நண்பர்கள் ஆதரவுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


அந்த வரிசையில் இரண்டாவது முழுநாள் நிகழ்வு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ஐந்து அமர்வுகளின் தலைப்புகளை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இடம் மற்றும் இதர விபரங்கள் விரைவாக வரும் நாட்களில் வெளியாகும். 

நாம் தற்சமயம் எதிர்கொண்டு வரும் பல்வேறு சூழல்களையும் சமாளிக்க நமக்கு என்றுமே துணை நிற்கப் போவது அய்யாவின் சிந்தனைகளும் எழுத்துக்களும்தான். எனவே அது பற்றிய விரிவான உரையாடல்களுக்கு 
நண்பர்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இந்த முழுநாள் நிகழ்வுக்கு நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். நன்றி. மகிழ்ச்சி..!  

மேலும்

மிக்க மகிழ்ச்சி , கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் , பெரியார் பிறந்த நாள் விழாவை , அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் , சிறுவர்களுக்கான பேச்சு போட்டி , ஓவியப்போட்டி நடத்துகிறோம் , வாழ்க பெரியார் , வளர்க சமூக நீதி !!! 10-Sep-2018 9:09 pm

  ஈரோடு மாவட்ட மைய நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் "இலக்கிய சந்திப்பு " மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள் - நான்காம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்..! .

இம்முறை நாம் பெண்கள்.. பெண் சார்ந்த அரசியல்..உடை.. குடும்பம்.. காதல்.. கலை என பலவாறு பெண் நிலைகளை அதன் நோக்கினை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தி எழுதிய தமிழ் இலக்கியத்தின் சிறந்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் அம்பையின் மூன்று சிறுகதைகளை இந்த மாத நிகழ்வுக்கென தேர்வு செய்யப்பட்டன.

மூன்று சிறுகதைகளை குறித்து மூன்று வாசகர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தை நம்மோடு உரையாற்ற இருக்கிறார்கள். மேலும் அவர்களோடு நாமும் கதைகள் குறித்து விவாதிக்கலாம். 

கதைகளை வாசிக்க... கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

”வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” 
https://bit.ly/2L8VbRs

“காட்டில் ஒரு மான்”
https://bit.ly/2L0Ji3b

”வயது”
https://bit.ly/2ztpVLH

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, வரும் ஞாயிறு மாலை 5:30 க்கு ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் நடைப்பெறும் வாசகசாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வாசிப்போம்.. உரையாடுவோம்..! நன்றி..!  


தொடர்புக்கு : 9600321289

மேலும்

திருப்பூர்.., ஈரோடு.. கோவை மாநகரங்களில் #வாசகசாலை வழங்கும் “ இலக்கிய சந்திப்பு” நிகழ்வுகளின் விபரங்கள்.

அனைவரும் வருக...!

மேலும்


மேலே