எண்ணம்
(Eluthu Ennam)
ஏமாற்றி ஏமாற்றி ஏணி ஏறவேநினைப்போர் தான் நிறைந்துவருகின்றார்கள் உலகினிலே... (ஆர் எஸ் கலா)
27-Aug-2018 2:27 pm
ஏமாற்றி ஏமாற்றி ஏணி ஏறவே
நினைப்போர் தான் நிறைந்து
வருகின்றார்கள் உலகினிலே
ஊரார் பணத்தை ஓடி வாரி
சுறுட்டுவோர் விலாசம் கிடைத்தால்
காட்டிக் கொடுப்பேன் கவிதையினாலே
பொய் முகம் காட்டி பொய் உரைக்கும்
ஆசாமிகளின் முகத்திரை
கிழிப்பேன் கவிதையினாலே
ஊதி அணைக்க. நின்று எரியும்
தீபம் இல்லை என்றும் நின்று
ஒளி கொடுக்கும் கதிரவன் என
உணர்த்துவேன் கவிதையினாலே
தீச்சுடர் போல் வரிகளினாலே
அனல் பறக்கும் சொல் எடுத்து
எரிமலை போல் வார்த்தை கொண்டு
சுட்டு எரிப்பேன் நான் கவிதையினாலே.
மெல்ல முன்
நோக்கி நான்
நகர,
வழி துனையாய்
அன்று வந்த
அதே,
சூரியன் இன்றும்!
என் நினைவுகள்
மட்டும்,
பின்னோக்கி
ஏன்? என்று
அன்று,
கேட்ட கேள்வியே
மீண்டும் இன்று
அன்று
பல பதில்கள்
அனைத்தும்
என்னை,
சமாதானபடுத்ததான்
என்றாலும் சமாதானம்
ஆகவில்லை,
இன்று வரை
இன்றைய என்
கேள்வியும்,
ஏன்? என்று தான்!
அது,
ஏன்?
என்று தான்!
#sof
#sekar