எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று தமிழுக்கு பிறந்த நாள்...

தமிழை அன்பாக நேசித்த தமிழன்பனுக்கு பிறந்த நாள்...

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு...
புதுவை அகன் அய்யாவிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு....

"கவியரசர் தமிழன்பன் அய்யா அவர்களின் பிறந்தநாளுக்கு விருது பெறும் எழுத்தாளர்களில் உன் பெயரும் சேர்த்துள்ளேன்" என்று

அதுவும் சென்னையில் என் இல்லம் இருக்கும் இடத்தின் அருகிலேயே விழா என்று அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார்...

என் துணைவியாரிடம் அழைப்பிதழை காண்பித்தப்போது "யார் இந்த பரிதி.முத்துராசன்?" என்ற கேள்வியுடன்...

அவன் நான்தான் என்றும் பரிதி.முத்துராசன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவதாக சொன்ன போது.....
ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்கள்

அப்புறம்தான் தெரிந்தது அந்த துள்ளல் எனக்கு அல்ல...
இல்லம்தோறும் தொலைக்காட்சியில் இன்பத் தமிழில் செய்தி வாசித்து பலர் இதயங்களில் இடம் பிடித்த...
அய்யா தமிழன்பன் அவர்களுக்கு என்று....

பிறகு அய்யா தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு நானும் விருது பெற்ற நிகழ்வு மட்டுமல்ல....
அன்றிலிருந்து என் துணைவியார் மனதில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது...

இந்த சிறப்பினை எனக்கு வழங்கிய புதுவை அகன் அய்யா அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது...🙏


மேலும்

உண்மைதான் . எனக்கும் அதில் கலந்து கொண்ட பெருமையாக உள்ளது . ஐயா அவர்களின் பிறந்த நாளை , ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய திருநாள் . ஐயா அவர்களை , மகா கவிஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை . சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் . ஐயா அவர்கள் நூறாண்டு கடந்து பல்லாண்டு வாழ்ந்திட விழைகிறேன் . அன்பு நண்பர் அகன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் . பழனி குமார் 28-Sep-2022 10:38 pm

மேலே