தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
மடை திறந்து
மடை திறந்து
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் குயில் நான்
இசை கலைஞன் என்னாசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞாலம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே (2)
விரலிலும் குரலிலும் சுவரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
(மடை திறந்து தாவும்)
நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம் (2)
இசைகென்ற இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
(மடை திறந்து தாவும்)
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
