தமிழ் வீரரின் எழுச்சி
லல்லல லல்லல லால-ல
லல்லல லல்லல லால-லால
(என்ற வாய்ப்பாட்டு)
எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர்
இப்புவி வீழினும் வீரர் ! வீரர்!
சிங்கப் படையினைப் போலப்-பகைத்
தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்!
கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள்
காதல் எலாமந்த நாட்டினோடு
தங்க ளினத்தவர்க்காக-உயிர்
தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்!
(எங்கள் இளந்தமிழர் வீரர்)
வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள்
வீர மெலாம்புவி ஏறவேண்டும்
சுற்றம் சுகப்பட வேண்டும-நற்
சுதந்திரம் வாழ்வினில் கூடவேண்டும்
மற்றிவை; வீரரின் உள்ளம் தனில்
மண்டிக் கிளர்வன; வாழி! வாழி
சற்றிதில் சோர்பவர் அல்லர்-இதில்
சாவடைதல் ஒன்று வாழ்தல் ஒன்று!
(எங்கள் இளந்தமிழர் வீரர்)
சோழனென் றேஒரு வீரன்-இந்தத்
தொல்புவி காத்தவன் வீரன்-வீரன்!
வாழிய பாண்டிய வீரன்!-அவன்
வாய்மையி லேபெரும் வீரன்-வீரன்!
ஊழிபெ யர்ந்துவந் தாலும் தங்கள்
ஊக்கங் கெடாக்குடி தோன்றினோர்கள்.
வாழ்க! தமிழ்க்குல வீரர்-அந்த
வன்மைத் தமிழ்க்குலம் வாழ்க! வாழ்க!
(எங்கள் இளந்தமிழர் வீரர்)
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)