ஏஜே 180

ஏஜே…
ஏஜே…
மனம் மறைப்பதேன்?… ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஏறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளை பாரு
மனதை கூறு
மனம் மறைப்பதேன்?… ஏஜே

நாடியைத் தேடி உனது
கரம் தீண்டினேன்
நாழிகை ஓடக் கூடா
வரம் வேண்டினேன்

அருகிலே வந்தாடும்
இருதயம் நின்றோடும்
திண்டாடும்

மேல்விழும் தூறல் எனது
ஆசை சொன்னதா?
கால்வரை ஓடி எனது
காதல் சொன்னதா?

மனதினை மெல்வேனோ?
சில யுகம் கொள்வேனோ?
சொல்வேனோ?


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:21 pm)
பார்வை : 0


மேலே