துறுதுறு கண்ணில் 180

துறுதுறு கண்ணில்
துரு நீங்கும் போது
சிறுசிறு கனவுகள்
சிறகு சூடும்

நாளை போடும்
சேதித் தாள் - எந்தன்
பேரைக் காட்டுமே!
எல்லைத் தாண்டி
நோபல் பரிசு என்
கைக்கெட்டுமே!

நோயில்லாத
பூமிப் பந்தொன்றை
நானே கட்டுவேன்!
அன்னை கண்ணில்
இன்பம் உண்டாக்க
விண் முட்டுவேன்!

புதிய புதிய உலகம் வேண்டாமே
நேற்றுலகம் நான் காண்பேன்
தூசில்லா பூங்காற்றிலே…

மழைகள் விழ
விசை செய்வேன்
விழிகள் அழ
தடை போடுவேன்

கனவை
விதை எனப் புதைக்கிறேன்

திரையால் மூடும்போதும் - விண்ணில்
தீ மறைவதில்லை
பசியால் வாடும் போதும் - கண்ணில்
தீ குறைவதில்லை

பல நாள் இருளும்
ஒரு நாள் சுருளும் எனவே!
மருளும் மனதில்
ஒளியாய் திரளும் கனவே!

கனவெல்லாம் கூடுமே
கைகள் கூடும் வேளையில்
இருளெல்லாம் தீயுமே
தீயில்...


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே