தமிழ் கவிஞர்கள்
>>
நாஞ்சில் நாடன்
>>
வதை
வதை
மூக்கில் பொடி தூவி
சவுக்காய் வால் முறுக்கி
பல்பதியக் கடித்து
தேரேற்றி
முகம் பொசுங்கப் புகைபோட்டு
பட்டாசு வெடித்து
ஆசன வாயில் எரிவன அரைத்துப் பூசி
என் செய
சண்டித்தனமல்ல
தள்ளாமை
மறியலல்ல
இயலாமை
சாலை நடுவில்
எம் கிடப்பு.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
