ஆண்மை இல்லை - தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

அன்று மழையோ மழை

நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்

அடிவயிற்றின் பயிர்மேடு

பரவசத்தில் சிலிர்த்து எழ

ரம்மியமான மந்தகாசப் புன்னகையை

உடலெங்கும் நழுவவிட்டபடி

மழை தரையிறங்கியது

நனைந்து உடலொட்டிய பாவாடையை

உயர்த்தி நின்றது காடு

ஓய்ந்த மழையை

அம்மாவின் சொல் மீறித்

திமிறிப் பறந்த பறவை சொன்னது

நினைவுகளின் தடயங்களை

மழையால் அழிக்கமுடிவதில்லை

பகல் முழுதும், பின்னும்

அதன் பாடல் ஓயவேயில்லை

மகரந்தச்சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்

சோர்வுடன்

பூமியில் எங்குமே ஆண்மையில்லை


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:39 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே