தமிழ் கவிஞர்கள்
>>
குட்டி ரேவதி
>>
உப்புக்கண்ணீர்
உப்புக்கண்ணீர்
அந்தக் கடலாகி நிற்கும் அவள் கண்ணீரில்
எத்தனை ஆயிரம் அலைகளாய் எழும்பி நிற்கின்றன
அவளின் வேட்கைகளும் கேவல்களும்
என்று அவள் அறியவே இல்லை
உப்பு நீரிலும் மடியா தாவரங்களை விளைவிக்கிறாள்
சப்தங்கள் அடங்கிய அவள் உலகத்தில்
புற வெளி அறியாத உயிர்களை உலவ விடுகிறாள்
பாறைகளை மோதி அறையும் அவள் கைகள்
கரையேறத் துடிக்கும் அவளின் மதலைகளை
கடலுக்குள் இழுத்து ஆழம் விளையாட அனுப்புகின்றன
தன் எல்லா பொக்கிஷங்களின் வண்ணங்களையும் மறுத்து
தன்னிடம் ஏதுமில்லை ஏதுமில்லை என கைவிரிக்கிறாள்
அவள் உறங்காமல் இயங்கிக் கொண்டே இருக்கிறாள்
உப்பாகிக் கரிக்கும் அவளை
இரத்தமாக்கி புரவிகளாக்கி எட்டுத்திக்குகளாக்கி
எழும் சூரியனை
தினம் தினம் பிரசவிக்கிறாள்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
