தமிழ் கவிஞர்கள்
>>
ஞானக்கூத்தன்
>>
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி கரப்பான்
தண்ணீர் பக்கெட்டின் வெளியில் கனாக்காண
உள்ளேயிருந்து வெளிப்பட்டபோது.
அவசரப் படாமல் தின்றது பல்லி அதன் குறிகள்
கரப்பானுக்கு மௌனமாய்ப் போதித்ததெவ் வுண்மை?
விலக்கிவிடாமல் இருந்து பார்த்து கரப்பான்
மிஞ்சாமல் மறைந்ததும் எழுந்துபோய்த் தண்ணீர்
குடித்துத் திரும்பிப் பக்கெட்டைப் பார்த்தேன்
கவிஞன் எதிரில் கொலைக்கிடம் கொடுத்ததைக்
காட்டிக் கொள்ளாதிருந்ததந்த நீல பக்கெட்டு
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
