மெசியாவின் காயங்கள் - ஒளி

பழகியிருந்தன
எல்லா வீடுகளும்.

ஆணும் பெண்ணுமாக
ஏழு பிள்ளைகள்
ஒரே திண்ணையில்
இடம் விட்டு விட்டு நித்திரையில்
குறுக்கே வெளிகளற்ற ஒரு கனவோடு.

இடைவெளி குறையும் போதெல்லாம்
எழுந்து பிள்ளைகளை
சரி செய்வாள் அம்மா.

ஏழு வீட்டிலும்
விளக்குகுழியில் சிம்னி விளக்கிருந்தது
அதற்கு மேலும்
குறைக்க முடியாத
வெளிச்சத்தோடு


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:11 am)
பார்வை : 40


பிரபல கவிஞர்கள்

மேலே