தமிழ் கவிஞர்கள்
>>
ராஜமார்த்தாண்டன்
>>
இப்படியும் சில விஷயங்கள்
இப்படியும் சில விஷயங்கள்
பறவைகளில் காகங்கள் மீது
அலாதி பிரியம் எனக்கு
குழந்தைகள் கைப்பண்டத்தை
லாகவமாகப் பறித்துச் செல்லும்
திருட்டு ஜென்மம்தான்
வீட்டு மதில்மேல் வந்தமர்ந்து
சமயா சந்தர்ப்பம் அறியாது
கத்தித் தொலைக்கும் மூடப்பிறவிதான்
எனினும்
நான் தவழ்ந்து வளர்ந்த கிராமத்திலும்
இன்று பிடுங்கி நடப்பட்ட இந்த நகரத்திலும்
தினமும் என்னைப் பார்த்து
கரைந்தழைக்கும் நண்பனல்லவோ அது.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
