ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
ல ல லல்ல ல ல லல்ல ல ல லா

கோடி மின்னல் போலே ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலே ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தல் தீயோடு பஞ்சை சேர்த்தல்
இன்று காதல் ஏக்கம் தண்டால் சென்றால்
நாளை என் செய்வாளோ

கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
நிலவில் அதுவும் குறையாது
என்னோடு தன்னை சேர்த்தால்...தன்னோடு என்னை சேர்த்தல்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றால்
நாளை என் செய்வாளோ


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:23 pm)
பார்வை : 132


மேலே