வறுமை
நினைத்தேன்...
கண்கள் சிவந்து
கன்னங்கள் ஈரமாயின...
நா வறண்டு போனது
எத்தனை வரிகள் பேசினாலும்
அது தரும் ஒரே பொருள் துன்பம்...
இதயத்தை நொறுக்குவது போல்
கடுமையான வலி!
நாம் உண்ணும் பருக்கையின் எண்ணிக்கையைவிட
உண்ணா பிஞ்சுகளின் எண்ணிக்கை
மிகவும் அதிகம்...
புரியாத ஓர் கசப்பான உணர்வு!!
மொழியும் வரியும் மறந்து
கண்ணீரில் கரைந்து
புத்தகத்தை நனைத்தது...
புரிந்துக் கொள்ளுங்கள் அவர்களின் வலியை...
உதவி கரங்கள் கூட வேண்டாம் ..
உதவி விரல்களையாவது நீட்டுங்கள்...
வாழட்டும் பல உயிர்!! வாழ்த்தட்டும் நம் இனம்...!!