இயற்கை
இயற்கை
தான் இருந்தவண்ணம் என்றும் இருந்து,
இனிய மகிமை புரிகிறது.
இயற்கை
இனிமை எல்லாம் தன்னுள் கொண்டு
தனித் தகைமை காட்டுகிறது.
இயற்கை
ஈடில்லா ஈகை கொண்டு எல்லோருக்கும்
எல்லாம் ஈந்து கருணை காட்டுகிறது.
இயற்கை
காலம் தவறாக் கடமையை ஆற்றி
காருண்யம் புரிகிறது.
இயற்கை
செயர்க்கையாம் மாயையில் சிக்காமல்
இயற்கையாய் என்றும் இருக்கிறது.
பாலு குருசுவாமி