வேண்டும் இனமானம் மீண்டும்

தமிழும் தமிழனும்
ஆங்கிலத்தின் கடைகளில்
அடகு வைக்கப்பட்டு
அடங்கியழக் கற்றுக்கொண்டன!

இனமும் ஈழமும்
இன்றளவும் இரும்பறையில்!
கம்பிகளின் கறுப்புகளில்-வாழக்
கற்றுக்கொண்டான் தமிழன்!

மேடைப் பேச்சுக்கும்
மேற்கோள் குறிப்புக்கும்
சாய்வு நாற்காலியாகிச்
சரிந்து போனது-இனம்!

அனலின் நாவுகளைத்
தணலின் தேகம்
அரித்துக் கொண்டிருப்பதை
அறிந்திருக்க வில்லை-தமிழன்!

மீண்டும் விழுந்து
மீண்டு எழுந்து
மகரந்தம் கேட்டு
மருகி நிற்கிறது-இனம்!

இன்னும் நீடித்தால்,
சூல்கொண்ட மேகம்
சுழிக்காற்றில் கலைக்கப்படலாம்!
பிழைத்திருக்கலாம்,
சூறாவளித் தமிழன்
சுழிக்காற்றுக்குத் தப்பித்தால்!

எழுதியவர் : தீபா (13-Feb-13, 4:45 pm)
சேர்த்தது : deepasamsagu
பார்வை : 170

மேலே