காதல்

காதல் உனக்கும்

எனக்கும்

தெரிந்த ஒன்று.............

பிறந்தநாளை மறந்தவன்

எல்லாம் காதலர்தினம்

கொண்டாடுகிறான்

நேசத்தின் அறைகூவளாய்.......

காதல்

ஒரு தனி உலகத்தின் வாசற்படி!

அழகை ரசிக்கத் தோன்றும்,

தனிமையில் சிரிக்கத் தோன்றும்,

விழித்துக்கொண்டே கனவு காணத்

தோன்றும்,

தூக்கத்தில் பேச வைக்கும்,

தூங்கமல் யோசிக்க வைக்கும்,

ஏன்!

சில சமயம் இதயம் கூட

இடம் மாறுவதுண்டு...

எல்லோரும் கொஞ்சம்

எழுந்து நில்லுங்கள்

உங்களுக்கு ஒரு காதல்

கீதம் சொல்லித்தருகிறேன்...

உங்களுக்கு சொந்தமானவர்க்ளின்

இதயத்துடிப்பை கேளுங்கள்,

உங்களுக்காக துடிக்கும்

துடிப்பை கேளுங்கள்,

அது உங்கள் அழகான ஆழமான

காதலை கீதமாக

சொல்லும்

இதை விட ஒரு காதல் கீதத்தை

எங்கே கேட்டுவிட முடியும்....

கடைசியாக

வாழ்த்துகிறேன் காதலின்

முடிவால் மனமேடையை

கண்ட ஜோடிகளுக்கும்,

கல்லறையை கண்ட

காதலர்களுக்கும்

என் வாழ்த்துக்கள்....

எழுதியவர் : இளந்தமிழன் (14-Feb-13, 10:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 482

மேலே