சாட்டையடிகளாய் வேண்டும் சட்டம் ....!!

( மரண தண்டனை வேண்டாம் என்னும் மனிதாபிமானத்தால் மானங்கெடுகிறது சட்டங்கள்,
விளைவாய் மடிகின்றனர் நம் சகோதரிகள் ......
வெறும் சம்பிரதாயமாகிப்போன சட்டங்கள் சாட்டையடிகளாய் அவதரிக்கும் கணம் கானல் நீராகிப்போகுமோ என்னும் கவலையுடன் பதிகிறேன் நண்பரின் படைப்பை ,........!! )
கடத்திவந்து
கைகால்களை கட்டி
கதறக்கதற கற்பழித்துவிட்டு
கட்டியிருக்கும்
வாய்த்துணி விலக்கி
வலிக்குதா என்றேன்
சிரித்துக்கொண்டே....
கண்ணீரை நிறுத்தி
எழமுடியாமல் நிமிர்ந்து
விம்மிக்கொண்டே
பசிக்குது என்றாள்
எச்சில் ஒழுக..............
ஆறேழு நாட்கள்
ஆசைதீர அவளை
அனுபவித்துவிட்டு
சங்கை அறுத்து
துடிக்கத்துடிக்க
கொலைசெய்து
தூக்கி வீசி விட்டேன்
சாக்கடைக்குள்.........
அதற்கு ,
காவலர்கள் காவலிருக்க ,
வேளைக்கு உணவுகிடைக்க ,
எந்த கவலையுமில்லாத
எதிர்காலத்தை உருவாக்கி ,
உயிரை பறிக்காது ,
உங்கள்
சட்டம்தந்த ஆயுள்தண்டனை
எங்கள்
மயிரைக்கூட அசைக்காது.... !!!
நன்றி
- கவிதை நேசன்