உன் தேடல் தீரவில்லை
எங்கிருக்கிறாய்
என் தோழி ...?
ஆறாம் வகுப்பில் அறிமுகமாகி ..
ஏழாம் வகுப்பில் எனக்கென்றாகி...
எட்டாவதில் கவிதை எழுதி ..
ஒன்பதில் உயிரில் கலந்து ..
பத்தாவதில் பரிச்சயம் ஆகி ..
பிளஸ் ஒன்னில் பிடித்து போக
பிளஸ் டூவில் என் பிகர் நீஎன்றானாய் ..
கல்லூரி முதலாண்டில்
காதலித்தோம் ...
இரண்டாமாண்டில்
இசைவு தந்தாய் ..
மூன்றாமாண்டில் முத்த மழையில்
மூழ்கி திளைத்தோம் ...
ஆனால்
எல்லை மீறவில்ல
எப்போதும் நாமிருவரும் ...!
காதலின் கற்பை காத்தோம் கடைசி வரை ..!!!
"போதும் படித்தது."..
உன் அப்பா அதட்டினர் ...
தொடரவில்லை நீ படிப்பை ...
தொலைந்து போனேன் நான்..
உன்னை பார்க்கவே தவம் கிடந்த்தேன்..
எப்போதாவது நீ வருவாய் கோவிலுக்கு
எங்க ஊர் எம் எல் ஏ மாதரி...!!
பாய் வீட்டுப் பையன்
ஏன் கோவிலுக்கு வர்றான்..??
பூசாரி வரைக்கும்
புரிந்து விட்டது நம் காதல் ..!
கார்த்திகைக்கு தீபம் ஏற்ற
நீ வருவாயென
உன் கடைசி தம்பி
என் காதல் அறிந்து சொன்னான் ...
துணைக்கு உன் அப்பா வருவது
தெரியாது எனக்கு ...??
சந்திக்க முடியவில்லை ...
வீதிவரை வந்து ...
விதியோ என்று
வீடு திரும்பி போனேன் ...!!
வருடம் பத்தாகிவிட்டது...
எங்கிருக்கிறாய் ..நீ .
தெரியவில்லை ...
திருமணமாகி பிள்ளைகள்
இரண்டிருக்கலாம் உனக்கு
என்னைபோலவே ..!!!
என் குடும்பம் உன் குடும்பம்
வேறு வேறாகிவிட்டது...!!
ஆனால்
இன்னமும் கூட
உன் நினைப்பு
உயிருக்குள் ஓடிகொண்டிருக்கிறது...
இது சரியா? தவறா?
சரிபார்க்க நேரமில்லை ...
மனைவியின் அணைப்பு
குழந்தைகளின் சிரிப்பு ...
எல்லாம் கிடைத்தாலும் ...
உன் தேடல் மட்டும் தீர்ந்தபாடில்லை ...!!!!