இதே கதை...

பூவிதழில் மணம்வைத்தவன்
பேரென்ன பேரென்ன,
பூவையிதழில் தேன்வைத்தவன்
பேரென்ன பேரென்ன...!

வைத்தவன் இருப்பதெங்கோ,
வந்தவன் அனுபவிப்பதாம்..
இந்தக்கதையைச் சொல்லிநிற்கும்
இங்கேயுள்ள மரங்களெல்லாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Feb-13, 2:42 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 100

மேலே