!!!===(((மஞ்சள் நாகம் மார்பில் கொத்தும்)))===!!!

நெற்றி பொட்டில்
பாய்ந்த தோட்டா
செந்தீயாய் எரிந்தபடி...

உயிர்பிழிந்த ரத்தத்துளிகள்
செந்தூரமாய்
உச்சி வகிடில்
கொதித்தபடி...

உணர்வுகளை நெருப்பிலிட்டு
உருக்கி செய்த உருட்டுகள்
கால்களின் நடுவிரலில்
விலங்குகளாக...

நாறில் சுருக்கிட்டுத்
தற்கொலையான பூக்கள்
கூந்தல் காட்டில் சமாதியாக...

இரவின் ஸ்பரிசங்களில்
சல்லாப சடங்கிற்காய்
சரிந்துகிடக்கும் உடல்
சடலமாக...

கழுத்தை சுற்றிய
மஞ்சள் நாகம்
மார்பில் கொத்தும்
முள்ளாய் குத்தும்...

பெரியோர்களின் கட்டாயத்தால்
மனசுக்கு பிடிக்காதவனை
மணந்துகொண்ட
பெண்களின் வாழ்க்கை....!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (28-Feb-13, 11:12 am)
பார்வை : 508

மேலே