வாழ்வியற் குறட்டாழிசை . 7 (நல் வார்த்தை.)

வாழ்வியற் குறட்டாழிசை . 7

நல் வார்த்தை.


நல் வார்த்தை தான் உலகில்
நம்பிக்கை வேரை ஊன்றுகிறது.

நல்ல மனமுடையோனின் உதட்டால் தவழ்வது
நல்ல வார்த்தைகளாகவே அமையும்.

கடும் சொற்கள் கல்லாக விழுந்தால்
கனிவான சொற்கள் மலராகிறது.

ஊசி நுழையா இடத்திலும் நற்சொல்
பாசி விலக்கிப் பாலூற்றும்.

ஆங்காரமாய்க் கொதிப்பவனை நல்ல வார்த்தை
பூங்கரமாய் அரவணைத்துச் சாந்தமாக்கும்.

கடுகைத் துளைப்பதுவாய் நற்சொல் மனப்
படுகை ஊடுருவி அசைக்கும்.

நல்வார்த்தை வளம் கோடை மழைத்துளியாகி
செல்வாக்குடை வாழ்விற்கு ஓடையாகிறது.

அடம் பிடிப்போன் வாழ்வில் அன்புத்
தடமான நல்வார்த்தை காயும்.

பண்புடை நற்சொல் சூனியம் விலக்கி
நல்லெண்ணத் தானியம் விளைவிக்கும்.

சீக்கு அற்ற நல்வார்த்தைகள், ஊக்குவிக்கும்,
ஆக்குவிக்கும், தீமை நீக்குவிக்கும்.



வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-6-2011.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (28-Feb-13, 1:32 pm)
பார்வை : 123

மேலே