பொங்கி எழுகிறாள் புதுமைப் பெண்!

எழுகிறாள்! எழுகிறாள்!
புதுமைப்பெண எழுகிறாள்!
வருகிறாள்!வருகிறாள்!
வலிமையாகி வருகிறாள்!

உறுதிபெற்று வீரகாளி
உருவமுடன் எழுகிறாள்!
இறுதிமூச்சு உள்ளவரை
எதிர்த்திடவே வருகிறாள்!

விழிகளிலே நெருப்புடனே
வேகமாகி எழுகிறாள்!
ஆர்பபரிக்கும் இடிகளாகி
போரிடவே வருகிறாள்!

எரிமலையாய் சீற்றமுடன்
எரித்திடவே எழுகிறாள்!
கொந்தளித்து சுனாமியாய்
கோபமாகி வருகிறாள்!

பூவுக்குள்ளே இப்படியும்
பூகம்பமும் வெடிக்குமோ!
மென்மையதும் வன்மையாகி
இன்மைகளை முடிக்குமோ!

பொறுக்காது பெண்மையினி!
புறப்பட்டாள் சூலியாய்!
கொடுமைக்குக் கொடுமையாய்
கொடுவாளாய் பாய்கிறாள்!.

பசுவுந்தான்.... குத்திக்கொல்லும்....
பாதுகாக்கத் தன்னையே!
பசுவதியோ..... பழமையடா!
பத்தரகாளி.... புதுமையடா!

ஆண்களின் அவலங்களாம்
காமக்களிப் .....பேய்களே...!
பெண்களென்ன.... பதுமைகளா....
பிய்த்து விளையாடுதற்கு?.

.வந்தவழியைச் சிதைத்து
வதைத்தாயடா நீசனே!
பெண்தானடா..... பாவியே.....
உன்னையுந்தான் பெற்றாளே?

ஆசைப்பொருளா பெண்மை
அனுபவித்து வீசுதற்கு?
சண்டாளர்களே இனிமேல்
சங்குதான்டா..... உங்களுக்கு..

போற்றப்பட வேண்டியோரை
போராளிகளாக்கி விட்டீரே......!
இலங்கைச் சிங்களனைவிட
இந்தியர்...... இழிந்தீரே........!




.......!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (28-Feb-13, 2:33 pm)
பார்வை : 156

மேலே