நாங்கள்

நாங்கள் மத சார்பற்றவர்கள்,
ஆனால் மதக் கலவரங்கள் மட்டும் நடப்பதுண்டு .
நாங்கள் அமைதிப் பூங்காவில் வசிப்பவர்கள் ;
ஆனால் குண்டுகள் தவறாமல் வெடிப்பதுண்டு ;
நாங்கள் உலக சமாதானத்தை விரும்புகிறவர்கள் ;
ஆனால் பிருத்வியும் அக்னியும் இங்குண்டு ;
நாங்கள் கட்டுக்கோப்பான சட்டம் உடையவர்கள்
ஆனால் கற்பழிப்புக்கள் காவல்நிலையத்திலும் உண்டு
நாங்கள் பெண்மையை போற்றுகிறவர்கள்;
ஆனால் 'தொட்டில் குழந்தைத் 'திட்டம் உண்டு ;
நாங்கள் பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவர்கள் ;
ஆனால் நதிநீரில் மட்டும் அதற்க்கு விலக்குண்டு ;
நாங்கள் "இந்தியர்கள் :

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Mar-13, 10:45 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே