ஏய் பாரதி..

நான் எதிர் கொள்ளும் காற்றை
தலைகவசத்தோடு தொடுகிறேன்.
அவை என் தலைமுடி கோத
அபராதம் நூறு தருகிறேன்.

என் உடன் வந்த உறவை
அழைக்க நேரம் பார்க்கிறேன்.
முகம் அறியா நபரை
நொடிகள் மறந்து அனுகினேன்.

துயில் கலைத்திடும் அலார ஒளியை
அணைத்து விட வேண்டும்.
கழுத்தை நெறிக்கும் சட்டை பொத்தான்
அவிழ்த்து விட வேண்டும்.
விரல் மட்டும் தெரிய, சட்டை அணிவதை
நிறுத்தி விட வேண்டும்.
மணியடித்ததும் வயிர் நிரப்பிடும்
அட்டவணையை கொளுத்த வேண்டும்.

நான் சுவாசிக்கும் காற்றை கூட
குளிரூட்டும் அறையை
பூட்டி விட்டு முகத்தை
வெளியில் காட்ட ஆசை.

நான் நேசிக்கும் நண்பனின்
திருமணம் மறக்கும் நிலையை,
தந்த வேலை இனி வேண்டாமென
துறந்து விட ஆசை.

நான் இறந்து விட்ட
தருணம் ஒன்று
கனவில் வந்தது.
அங்கு என்னுடன்
என் வலைபேசியும்
துணைக்கு வந்தது.

காரியம் அன்று
வீட்டுக்கொரு
கடிதம் வந்தது.
அது கடிதம் அல்ல
மெமோ என்று
தெரிய வந்தது.

நான் எடுத்து சென்ற
வலைபேசியில்
தகவல் வந்தது.
காப்புறுதி திட்டம்
ஒன்றை அது
விளக்கி சென்றது.

அன்று
அடிமை பட பிடிக்காமல்
அமைதியாய் இருந்தே
அவனை துரத்தினோம்.
இன்று அவனுக்கு கீழே
அமைதியாய் அடங்கி
மூளை விற்கிறோம்.

ஏய் பாரதி..
நீ கேட்ட காணி நிலம்
உனக்கு கிடைத்தால் எனக்கு தருவாயா?
நான் என் வேலையை உனக்கு தருகிறேன்!

எழுதியவர் : சத்யாதித்தன்.ஆ (3-Mar-13, 6:08 pm)
Tanglish : EI baarathi
பார்வை : 113

மேலே