மணம் பரப்பிய மலர்
தேன் சுரக்கும் உதற்றினுள் சிக்கி
தேனூற்றினுள் கரைந்திட ஆசை.
மீன் குளிக்கும் நீரினுள் நீந்தி,
உயிர்கொண்டு பூசிவிட ஆசை.
உன் உயிர்த்துளி சக, ஈர்தச மூன்றில்
ஒர்தசம் என்னை விதைத்திட ஆசை.
இங்கு உடலுண்டு, உயிருண்டு,
மணம்பரப்பும் மலருண்டு,
உணர்வுண்டு, உரிமையோடு
உள்ளம் கொள்ளும் காதலுண்டு,
கண்ணே காணக் கனவுமுண்டு,
கனவுக்குள் கலவுமுண்டு,
களவு செய்த நிலவுமுண்டு,
கண்ஜாடைக் கதையுமுண்டு,
காண், கவிபாடி மனம் கலைத்த
மல்லிகையைத்தான் காணவில்லை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
