கவிதை எழுதவோ கண்ணழகிற்கு

கவிதை எழுதவோ கண்ணழ கிற்கு
தவழ்ந்து வரும்தென்றல் தொட்டு மகிழும்
கருங்கூந் தலுக்குப்பூக் கொண்டு வரவோ
சுருக்கமா கச்சிரிக்கும் சிக்கனக் காரி
கொடிநீ அணிய சுடிதார் தரவோ
அடிஎடுத்து மெல்ல அழகாய்நீ வந்தால்
விடியலும் பின்நிற்கு மோ

எழுதியவர் : கவின் சாரலன் (4-Mar-25, 11:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே