உன்னிடம்

மீள முடியாமல்
உன்னிடமே
தொலைந்துபோகிறேன் ...

திசை தெரியாத காற்றாய்
இசை இல்லாத பாட்டாய்..
உன் சுவடுகளுக்குள்ளேயே
சுருங்கி கிடக்கிறேன் ...

உன் முகக் கண்ணில் புதைந்து
நகக்கண்ணில்
நர்த்தனமாடுகின்றேன்..

உன் கண்ணீரில் குளித்து
புன்னகையில்
தலைதுவட்டுகிறேன் ...

உன் மூக்குத்தியில் கல்லாய்
கால் கொலுசில் முத்தாய் ..
உருமாறி உட்கார்ந்திருக்கிறேன்
உனக்கே தெரியாமல் ..

நீ சிரித்தால் விடிகிறது
என் வானம்..

உன் கோபம் என் சூரியன்

உன் அழகு என் நிலா ..

அந்தியும் நடுநிசியும்
உன் அகங்காரம்

காற்றும் மலையும்
உன் கர்வம் ...

நீ எப்படி என்னை
தவிர்த்தாலும்...

நான் ஒளிந்திருப்பது
உன்னிடம் தான்...!

உணர்ந்து கொள் ...!!

எழுதியவர் : அபிரேகா (7-Mar-13, 11:42 am)
Tanglish : unnidam
பார்வை : 87

மேலே