புன்னகை நிலைக்கட்டும்

பகலும் இரவும் நிலமும் நீரும்
ஆணும் பெண்ணும் இவையன்றி
இல்லை இந்தபூமி எனும்கோள் !

எவரும் சமம்இந்த மண்ணில்
எதிர்ப்பவர் இல்லை இதனை
மறுப்பாரில்லை உண்மையை !

சரிபாதி உரிமை மகளிர்க்கு
சமபங்கு சமூக மேன்மைக்கு
சரியே எனும் சமுதாயமும் !

மகளிர் தினம் மார்ச் எட்டு
மனமார வாழ்த்திடுவோம்
மங்கையரைப் போற்றிடுவோம் !

தாங்கிடும் பூமித்தாய் முதல்
கருவில் உருவாகி வரவிருக்கும்
சிசுவானப் பெண்வரை வாழியவே !

பூத்திடும் புன்னகை நிலைத்திட
உயிராய் உள்ளவரை மகிழ்ந்திட
மகளிர் யாவர்க்கும் வாழ்த்துக்கள் !

( உலக மகளிர் தின வாழ்த்துக்கள் ) -
08.03.2013
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Mar-13, 12:18 pm)
பார்வை : 131

மேலே