கண்ணீரே எங்கள் காதலுக்கு சாட்சி :(

சூடிய மலரோடு மனமேடை சென்ற அவளும் சொல்லவில்லை...
வாடிய மலரோடு மணபந்தல் சென்ற நானும் சொல்லவில்லை...
இன்று அரங்கேறும் அவள் திருமணமும் சொல்லவில்லை...
என்றோ அரங்கேறியது எங்கள் அன்புமனம் என்று !!

வார்த்தைகள் பல கோர்த்து எங்கள் காதல் வளர்ந்தது அன்று...
வார்த்தைகள் ஊமையாகி கண்கள் கண்ணீரில் தள்ளாடுது இன்று !!

என் விழிகள் அவள் விழியை தீண்ட வெட்கத்தில் தலைகுனிந்தால் அன்று...
வேதனையில் தலைகுனிகிறாள் இன்று !!

என்னை மறக்க, தன்னை அழிக்க துணிந்தால் அவள் அன்னை...
தன அன்னையை காக்க அவள் ஏறியதோ மனமேடை...
என் காதல் ஏறியதோ தூக்குமேடை !!

எடுத்து வந்தேன் ,அவள் எனக்கு அளித்த
காதல் பரிசை...
வைத்து விட்டேன் அதை, அவள்
கல்யாண பரிசாக !!

எங்கள் உறவு பிரிந்தாலும் இருவர் கண்களிலும் வடிந்த
"கண்ணீரே எங்கள் காதலுக்கு சாட்சி" :)

எழுதியவர் : பாரதிக்கண்ணன் (8-Mar-13, 1:27 pm)
பார்வை : 250

மேலே