நாட்டு நடப்பு - கே.எஸ்.கலை

கடவுளிடம்
கையேந்தி தோற்றவர்கள்
கடவுச்சீட்டுக்காக !
═ ═ ═
எரிபொருள்
மட்டுமல்ல - விலையும்
எரிக்கும் !
═ ═ ═
அப்பாவிகளின்
இரத்தத்தில் துவைத்ததுணி
செங்கம்பளம் !
═ ═ ═
இலக்கணம்
மீறல் - இன்றைய
இலக்கணம் !
═ ═ ═
சமத்துவம்
பிரசவிக்கிறது - பணக்காரர்களை
ஏழையாக்குவதால் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (10-Mar-13, 11:19 am)
பார்வை : 315

மேலே